First
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
அன்புடைய அகமுடையார் சமுதாய சொந்தங்களுக்கு வணக்கம்,
திருவண்ணாமலையில்,
24-03-2023, வெள்ளிக்கிழமை,
காலை 10.00 மணி அளவில்,
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் ஆலயம்,
வடக்கு கோபுரத்தை கட்டியவரும்,
அதன் கோபுரத்து அருகே உள்ள சுமார்
17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நமது அகமுடையார் சமுதாய துறவி
அம்மணியம்மன் சித்தர் வாழ்ந்த “அம்மணி அம்மன் மடம்”
நமது அம்மணி அம்மன் மடத்திற்கு சொந்தமானது, இந்த இடம் தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்தது வந்தது, ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிய நீதிமன்ற வழக்கு நடைபெற்று நிலையில், நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது,
அந்த தீர்ப்பில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற சொல்லி ஒரு உத்தரவிட்டது, ஆனால் ஆக்கிரமிப்பு அகற்றும் எனும் பேரில் பழைமையான மடத்தையும் சேர்த்து இடித்தது,
நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக இந்து சமய அறநிலையத்துறை இடித்ததை கண்டித்து நமது சமுதாய தலைவர்களும், சொந்தங்கள் தமிழ்நாடு முழுவதும் இருந்து வர உள்ளனர்.
ஆகையால், நமது ஒற்றுமையை நிலைநாட்டவும் நமது அகமுடையார் நினைவுச் சின்னமான அம்மணி அம்மன் மடத்தையும் காப்பாற்றவும் அனைத்து அகமுடையார் சொந்தங்களும் ஒன்றிணைந்து இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
உணர்வுடன்…..
மாமன்னர் மருதுபாண்டியர்கள் நற்பணி மன்றம் & அறக்கட்டளை (சென்னை)
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்