குலதெய்வம் என்பது பெற்றோரால் வருவது ஏனென்றால் குலம் என்பதை பெற்றோரால் தான் வருகி…

Spread the love

குலதெய்வம் என்பது பெற்றோரால் வருவது ஏனென்றால் குலம் என்பதை பெற்றோரால் தான் வருகிறது.ஆகவே பெண்ணிற்கோ ,ஆணிற்கோ குலதெய்வம் என்பது பெற்றால் தான் வரமுடியும் பெண்ணிற்கு திருமணத்திற்கு பின் குலதெய்வம் மாறாது என்று சென்ற பதிவில் கூறியிருந்தோம்.

உடனே பலர் திருமணத்திற்கு பின்பு கணவரின் குலதெய்வம் தான் பெண்ணிற்கு குலதெய்வம் என்று கூறி பலர் கமேண்ட் செய்திருந்தார்கள் அவற்றில் சில முரண்பாடான கருத்தை புரிந்துகொள்ளாமலே எழுதப்பட்ட கருத்துக்களை டெலிட் செய்துவிட்டோம்.ஆனால் இப்படி சொன்னவர்களே ஒரு முரண்பாடான கருத்துக்களை வைக்கிறார்கள். அதாவது ஒரே குலதெய்வத்தை வணங்கிறவர்கள் பங்காளிகள், இவர்களுக்கிடையில் திருமண உறவு செய்யக்கூடாது (இது ஒரளவிற்கு சரிதான்) ஆனால் இதே நபர்கள் கணவனின் குலதெய்வத்தை அவரது மனைவி ஏற்க வேண்டுமாம்??? எப்படி என்று பாருங்கள்! இவர்கள் சொன்ன கருத்துக்கு இவர்களே மாறுபடுகிறார்கள்.
குலம் என்பது பெற்றோரால் தான் வரும் கணவரால் பெண் எந்த வகையிலும் குலத்தை பெற முடியாது!பெற்றோரின் குலம் தான் பெண்ணிற்கும் குலம் எனும் போது குலதெய்வம் எப்படி மாறும்!

கணவரின் குலதெய்வத்தை மனைவி குலதெய்வமாக எப்படி ஏற்க முடியும்??
அப்படி கணவரும் மனைவியும் ஒரே குலதெய்வம் என்றால் இவர்கள் எப்படி கணவன் மனைவியாக வாழமுடியும்???

உங்கள் சிந்தனைக்கு!


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo