*Agamudayar அகமுடையார்* *அனைவரும் அவசியம் படிக்கவும்* அகிலம் முழுதும் பரவி வாழு…

Spread the love

First
*Agamudayar அகமுடையார்*
*அனைவரும் அவசியம் படிக்கவும்*

அகிலம் முழுதும் பரவி வாழும் இனச்சாதிக்குழு அகமுடையார் ஆவர்.
குறிப்பாக தென்னிந்தியாவில் பெரும் அளவில் மக்கள் தொகை கொண்ட பூர்வீகக் குடியாக மேன்மைமிகு வரலாற்றை தன்னகத்தே கொண்ட முதன்மையான தமிழர் பேரினக்குழு அகமுடையார்.

*கல்வெட்டுகள்,* வரலாற்று தரவுகள் அனைத்திலும் முதன்மை சார் இனமாக அகமுடையார்…
அகம்படி, அகமுடி முதலி, அகம்படி முதலி, அகம்படி நியாயம், அகமுடையார், அகம்படை, அகம்படி உடையார், அகம்படி பிள்ளை, அகம்படி சேர்வை, அகம்படி தேவன், உள்மணையார் , அகம்படி வேளாளர் போன்ற சொற்களை கொண்ட வரலாற்று தரவுகள் ஏராளம்.
தென் தமிழக வட்டாரம் மட்டுமின்றி வடதமிழகத்திலும் அதிக அளவில் அகமுடையார் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். மேலும் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் இருக்கின்றனர்….

*#அகமுடைய முதலியார்*
வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், குடியாத்தம், சித்தூர், சென்னை,செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய தொண்டை மண்டலத்தில் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். *முதலியார்* என்றால் முதன்மையானவர்கள், கோட்டை நிர்வாக முதலி, போர்த்தொழிலில் தளபதி, chief commander ஆகிய வகித்தமையால் *முதலி என்ற பட்டம்* அகமுடையார் மக்கள் தாங்கி வாழ்ந்து வருகின்றனர்.
சிப்பாய் கலகத்தில் முக்கிய பங்கு அகமுடைய முதலி மற்றும் அகமுடைய சேர்வை பட்டம் பெற்ற அகமுடையார் மக்கள் அதிகம்.
அகம்படி முதலி என்ற சொற்கள் தொண்டை மண்டலத்தில் கோட்டைப்பற்று அகமுடையார்,
இராஜகுல அகமுடையார் என கோவில்களில் உள்ள கல்வெட்டு தரவுகள் குறிக்கின்றன.
ஆற்காடு முதலியார், துளுவவேளாள முதலியார், பூந்தமல்லி முதலியார், அகம்படி உடையார், அகமுடைய நாயக்கர் ஆகிய அடையாள பட்டங்களுடன் அகமுடையார் மக்கள் பூர்வாங்கமாக வாழ்ந்து வருகின்றனர்.

*#அகமுடைய உடையார்*
திருவண்ணாமலை, திருக்கோவிலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி, கடலூர், கள்ளக்குறிச்சி, சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய நடுநாடு வட்டாரத்தில் உடையார் பட்டம் பெற்ற அகமுடையார் மக்கள் மிக அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர்.
உடையார் என்றால் பெருநிலம் பயிர்த்தொழில் வேளாண்மை என்பதே முதன்மையாகும்.
அரசன், ஈசன், சிவன், தலைவன், உயர் நிலையானவன் போன்ற பொருள் கொண்ட சொல்லே உடையார் ஆகும்.
மலைநாடு அகமுடையார்,
துளுவவேளாள அகமுடையார்,
கோட்டைப்பற்று அகமுடையார்,
பூவைசிய அகமுடையார் என்று பல்வேறு கல்வெட்டு தரவுகள் அதிகமாக இங்குள்ள சிவன் மற்றும் வைணவ கோயில்களில் காணப்படுகிறது.
உடையார் பட்டம் மட்டுமின்றி பிள்ளை, நாயக்கர், முதலியார் ஆகிய பட்டப்பெயர்களை தாங்கி அகமுடையார் மக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர்.
அதிகாரி, சேர்வை, படையாட்சி போன்ற பட்டங்களுடன் நடுநாட்டு தென்பகுதியில் கணிசமாக அகமுடையார் மக்கள் இருக்கின்றனர்.

*#அகமுடைய நாயக்கர்*
செஞ்சி, வேட்டவலம், சங்கராபுரம், திருக்கோவிலூர், கும்பகோணம்,நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற வட்டாரத்தில் நாயக்கர் பட்டம் பெற்ற அகமுடையார் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். நாயக்கர் மற்றும் பிள்ளை பட்டம் பெற்ற அகமுடையார் மக்கள் தங்களை துளுவவேளாளர் குலப்பிரிவாக அறியப்படுகின்றனர்.

*#அகமுடைய பிள்ளை & #தேவர்*
தஞ்சாவூர், திருவாரூர் போன்ற வட்டாரத்தில் பிள்ளை பட்டம் பெற்ற அகமுடையார் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். இந்த வட்டாரத்தில் அகமுடையார் மக்கள் தங்களை கோட்டைப்பற்று அகமுடையார் எனவும்,
இரும்புத்தலை அகமுடையார் எனவும் அறியப்படுகின்றனர்.
தேவர் மற்றும் பிள்ளை பட்டம் பெற்ற அகமுடையார் மக்களின் கோட்டைப்பற்று குலப்பிரிவாக அறியப்படுகின்றனர்.

*தமிழம் முழுவதும் பிள்ளை பட்டம் பெற்ற அகமுடையார் மக்கள் பரவலாக வாழ்ந்து வருகின்றனர்*

*#அகமுடைய தேவர்*
டெல்டா பகுதிகளில் தேவர் பட்டம் பெற்ற அகமுடையார் மக்கள் மிக அதிகம்.
மதுரை, கோயம்புத்தூர் போன்ற தென்மாவட்டங்களில் தேவர் பட்டம் பெற்ற அகமுடையார் மக்கள் மிக அதிகமாக செருமி வாழ்ந்து வருகின்றனர்.
தஞ்சாவூர்,திருவாரூர்,நாகப்பட்டினம்,கோயம்புத்தூர்,திண்டுக்கல்,திருப்பூர், விருதுநகர், திருநெல்வேலி,மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் தேவர் என்ற பட்ட பெயரை தாங்கி அகமுடையார் இனத்தினர் அறியபடுகின்றனர்.

*#அகமுடைய சேர்வை*
இராமநாதபுரம், மதுரை போன்ற தென்மாவட்டங்களில் சேர்வை பட்டம் பெற்ற அகமுடையார் மக்கள் அதிக அளவு வாழ்ந்து வருகின்றனர்.
ராமநாதபுரம்,சிவகங்கை,மதுரை,தேனி,திண்டுக்கல்,புதுக்கோட்டை,விருதுநகர், திருநெல்வேலி,தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் சேர்வை என்ற பட்ட பெயரை தாங்கி அகமுடையார் இனத்தினர் அறியபடுகின்றனர்.

*#திருமணம்*
வெவ்வேறு பட்டப்பெயர்கள் இருந்தாலும் அகமுடையார் சாதிக்கு உட்பட்டவைக்கு மட்டுமே திருமணம் சம்மந்தம் செய்கின்றனர். திருமணம் ஏற்பாடுகளை பாரம்பரிய முறையே செய்கின்றனர்.
பெண் பார்த்தல், உத்தமமாக இருப்பின் மாப்பிள்ளை வீடு பார்த்தல்,
இருவீட்டார் ஒத்துருப்பின் கை நினைத்தல், பின் தாம்பூலம் மாற்றல், நிச்சியதார்த்தம், பின்பு இரண்டு நாட்கள் நடைபெறும் திருமணம்.
தாய்மாமன், பங்காளி, சீர்சனம், கோழ பலகாரம் அனைத்து ஐதீக முறைகளுடன் திருமணம் பெரியோர்கள், சொந்தபந்தங்கள் , உற்றார் உறவினர், சுற்றத்தார், நட்புறவுகள் கூடி திருமணம் நடைபெறும்…
சொந்தம் விட்டு போகக்கூடாது என்ற கருத்தில் மாமன், மச்சினன் திருமணம் செய்வார்கள்…

*#வழிபாடு*
*சிவன் கோத்திரம், வைணவ கோத்திரம்* என இருவகையான வழிபடுதல்,
நாட்டு குலதெய்வமாக ஐய்யனார், அம்மன், கருப்பசாமி, முருகன் போன்ற தெய்வவழிபாட்டை முதன்மையாக இருப்பர். அனைத்து விடயங்கள், சுபநிகழ்வுகளுக்கு குலதெய்வ வழிபாடு முதன்மை ஆகும்…

கிராமம், ஊர், நகரம் அனைத்து இடங்களிலும் அகமுடையார் உறவுமுறைகள் குவிந்து ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்…

தென்னிந்தியாவில் கிட்டத்தட்ட 2 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரே இனச்சாதி அகமுடையார் மட்டுமே.

*#அகமுடையார் குல_பிரிவுகள்*
ராஜகுலம்
கோட்டைப்பற்று (பதினெட்டு கோட்டைப்பற்று)
இரும்புத்தலை
ஐவளிநாடு
நாட்டுமங்களம்
ராஜபோஜ
ராஜவாசல்
கலியன்
சனி
மலைநாடு
துளுவன் (துளுவ வேளாளர்)
புண்ணியரசு நாடு
பதினொரு நாடு

*#அகமுடையார் குல_பட்டங்கள்*
அகமுடைய தேவர்
அகமுடைய சேர்வை
அகமுடைய பிள்ளை
அகமுடைய தேசிகர்
அகமுடைய முதலியார்
அகமுடைய வேளாளர்
அகமுடைய கவுண்டர்
அகமுடைய உடையார்
அகமுடைய அதிகாரி
அகமுடைய மணியக்காரர்
அகமுடைய இராயர்
அகமுடைய பல்லவராயர்
அகமுடைய நாயக்கர்
அகமுடைய செட்டியார்
அகமுடைய ரெட்டியார்
அகமுடைய ராவ்

இதை தவிர்த்த ஏனைய பட்டங்கள்
வானவர், பொறையர், வேளிர், பழுவேட்டரையர், வில்லவர்,உதயர், சேரன்,மலையன், மலையான், வானவன், வானவராயன்,வல்லவராயன், பனந்த்தாரன்,பொறையான், மலையமான்,தலைவன்,படையாட்சி, மனியக்காரான், பூமியன், கோளன், வர்மா, நாகன், பாண்டியன், கொங்கன், அம்பலம் , நாட்டான்மை…

*#அகமுடையார்களாக #ஒன்றிணைவோம்*

அகமுடையார் பேரினமே!
ஆண்ட இனத்தின் அடலேறுகளே மூவேந்தர் இனத்தின் வம்சாவழியினரே அரசர்கட்கெல்லாம் அரசர்களாயிருந்து அகத்திற்கு அல்லாமல் புறத்திற்கு மண்டியிடாத மங்காத புகழோடு வாழ்ந்த மானம் காத்த மாமன்னர் மருதுபாண்டியர் குலத்தோன்றல்களே!

தமிழ்கூறும் நல்லுலகில் பெரும் பகுதியினரான நாம், தமிழர் நாட்டின் எல்லா மாவட்டங்களிலும், சுமார் ஒன்றரை கோடி பேருக்கும் மேற்பட்ட மக்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திர,கேரளா உள்ளிட்ட தென்னிந்தியா முழுவதும் பல்வேறு பட்டப்பெயர்களுடன் வாழ்கின்றோம். மேலும் இலங்கை,மலேசியா,பர்மா,சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பெரும்பாலானோர் பல தலைமுறைகளாக பூர்வீகமாக வாழ்ந்து வருகின்றோம்.

#அகமுடையார்_பட்டப்பெயர்கள்
அகமுடையார் சமூகத்தினர் தாங்கள் வாழும் மாவட்டத்திற்கேற்ப துளுவ வேளாளர், உடையார், பிள்ளை, முதலியார், தேவர், சேர்வை, கவுண்டர், மற்றும் நாயக்கர், அதிகாரி, மணியக்காரர், பல்லவராயர், செட்டியார், தேசிகர், ரெட்டியார், ராவ் உள்ளிட்ட பல்வேறு வட்டாரப் பட்டப்பெயர்களுடன் பரவலாக வாழ்ந்து வருகின்றோம்.

தமிழகத்தில் பெரும் எண்ணிக்கையில் நமது அகமுடையார் சமூகம் இருந்தும், பல்வேறு பட்டப்பெயர்களால் சிதறுண்டு, வலிமைகுன்றி, கேட்பாரற்றுக் கிடக்கிறோம். ஆனால் நாம் ஒன்று சேர மறந்துவிட்டோம்! மறுத்துவிட்டோம்!. இந்நிலை தொடர்ந்தால் இனிவருங்காலத்தில் நம் தலைமுறைகள் பாதுகாப்பில்லாமல், நாதியற்றவர்களாகத்தான் இருப்போம்.

நம் அகமுடையார் சமுதாய இன்றைய இளைய தலைமுறையினரும், எதிகால சந்ததியினரும் அனைத்து அரசுப்பணிகள் மற்றும் கல்வியிலும் மிகவும் பின்னடைவு ஏற்பட்டுள்ளனர். அதாவது கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், வேளான்மை மற்றும் சமுகபாதுகாப்பு போன்றவற்றில் தனித்து மிகவும் பின்னடைவு ஏற்பட்டுள்ளனர். இந்நிலை தொடர்ந்தால் அடுத்த தலைமுறையானது வாழ்வாதாரத்தில் மிகவும் கடைநிலைக்கு தள்ளப்படுகின்ற சூழ்நிலை ஏற்படக்கூடும்.

அகமுடையார் என்கிற இராஜவம்சமாகிய நாம் நமது உரிமைகளை பெற நாம் என்ன செய்யப்போகிறோம். நம் ஈடுஇனையாக இருந்த மற்ற சமுதாய மக்கள் ஒருங்கினைந்த சங்கம் மூலமாக அவர்களுடைய கோரிக்கைகள் அரசாங்கத்திடம் கொண்டு சென்று தங்களுக்கு என்று தனி இடஒதுக்ககீடு பெற்று அனைத்து அரசுப்பணிகள் மற்றும் கல்வியிலும் முன்னேற்றம் அடைந்துள்ளனர். நம் அகமுடையார் மற்றும் உட்பிரிவான துளுவவேளாளர் சமுதாயமானது தமிழகம் மற்றும் வெளிமாநிலம், வெளிநாடுகளிலும் பல்வேறு பட்டப்பெயர்களால் பிரிந்து சிதறி உள்ளோம்.
நாம் அனைவரும் நம்மை “#அகமுடையார்” என்று மட்டும் கூறி நம் இனத்தை நிலை நிறுத்த வேண்டும்.

*#சாதிக்கூட்டனி அரசியல்*
தென்மாவட்டங்களில் #முக்குலத்தோர்_தேவர் என்றும், வடமாவட்டங்களில் #வேளாளர்_முதலியார் என்றும் நம்மை பிரிக்கும் நோக்கோடு, அகமுடையார் வரலாறு தெரியாத சில பிழைப்புவாதிகளும், அமைப்புகளும் அகமுடையார்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
நாம் ” அகமுடையார் ” இனம் என்று மட்டும் ஒன்றிணைந்தால்…….. தமிழகத்தில் மட்டும் #ஒன்றறைகோடி_பேர் உள்ளனர், அதாவது தமிழக மக்கள் தொகையில் 15% மக்கள், நம் ” அகமுடையார்” சமுதாயம் ஆகும்.
நம் அகமுடையார் சமுதாய மக்கள் ஒன்றிணைந்து தனியார் மற்றும் அரசுதுறைகளில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் நம் சமுதாயத்திற்கென்று #பிற்படுத்தப்பட்ட வகுப்பில் #தனி_இடஒதுக்கீடு பெறலாம்.
நம் அகமுடையார் மற்றும் அகமுடையார் உட்பிரிவு துளுவவேளாளர் சமுதாய மக்கள் பலவாறுள்ள பட்டங்களை துறந்து அகமுடையார்களாக ஒன்றிணைவோம். அடுத்த தலைமுறைகளை நல்வழிப்படுத்தி காப்போம்.

பட்டங்களை_துறப்போம்…
#அகமுடையார்களாக_ஒன்றிணைவோம்.



இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்

திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo