மருதரசர்களின் மாண்புகளை வியந்த இராஜ் பவன் ! ———————————- …

Spread the love

First
மருதரசர்களின் மாண்புகளை
வியந்த இராஜ் பவன் !
———————————-
மருதரசர்களின் பெரும் வரலாறும், இந்தியச் சுதந்திரப் போராட்டத்திற்காக பல்வேறு சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்த இந்த தேசத்தை “ஜம்புத்தீவு பிரகடனத்தின்” மூலம் ஒருங்கிணைத்து,
1801 ஆண்டு ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு, உயிர் தியாகம் செய்த வீர வரலாற்றை சரியான தளத்தில் முன் வைக்கப்படாமல், 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் கலகத்தை முதல் இந்திய சுதந்திரப் போர் என இன்றைய தலைமுறை படித்து வரும் சூழலில் ,

சுதந்திரப் போராட்ட வரலாற்றை தமிழகத்திலிருந்து துவங்க வேண்டி மருதரசர்களின் “தென்னாட்டு புரட்சியை”
முறையாக மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு சமூகம் பல்வேறு தளங்களில் கொண்டு சேர்க்கிறது !
அந்த வகையில் மருதரசர்களின் வரலாற்றில் பெரிதும் அக்கறை கொண்ட, தேசபிமானி, அக்கா திருமதி இராதா தேவர் அவர்களின் பெருமுயற்சியில், மேதகு தமிழ்நாடு ஆளுநர் R.N.இரவி அவர்களை,
மாமன்னர் மருதுபாண்டியர்கள் வாரிசுதாரர் குழுத் தலைவர்,
திரு. த.இராமசாமி சேர்வை, அகமுடையார் அரண், தலைமை ஒருங்கிணைப்பாளர், திரு. சோ.பாலமுருகன் அகமுடையார் மற்றும் திரு. சரவணன் IRS, திரு. வினோத் (தாமரை டிவி) ஆகியோர் 06-07-2023 வியாழக் கிழமை, சென்னை இராஜ் பவனில் சந்தித்து மருதரசர்களின் வரலாற்று ஆவணங்களை சமர்ப்பித்தனர்,

மேலும், மருதரசர்களின் முதல் இந்திய சுதந்திர போரை போற்றும் வண்ணம் திருச்சியிலும், சிவகங்கையிலும் நினைவுச் சின்னங்களை ஏற்படுத்த வேண்டும், ஜம்புத்தீவு பிரகடனம் வெளியிடப் பெற்ற ஜூன் 16 ஆம் தேதியை முதல் சுதந்திர போர் பிரகடன நாளாக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளையும் மனுவாக அளித்தனர் !

நிகழ்வில், ஜே.கோர்லோ எழுதிய ஆங்கில நூலான “MAHRADU”, கர்னல் ஜேம்ஸ் வெல்ஷ் எழுதிய “MILITARY REMINISCENCES, VOL -1”, கே.இராஜய்யன் எழுதிய “SOUTH INDIAN REBELLION” போன்ற வரலாற்று நூல்களையும் ஆளுநருக்கு பரிசளித்தனர் !
அரைமணி நேரத்திற்கும் மேலான இச்சந்திப்பில், நமது வீர வரலாற்றையும், அதன் தொடர்ச்சியான நமது கோரிக்கைகளையும் பொறுமையாக கேட்ட ஆளுநர் அவர்கள், மத்திய அரசின் கவனத்திற்கு கண்டிப்பாக கொண்டு செல்வதாக உறுதியளித்துள்ளார்.

விதைத்துக் கொண்டே இருப்போம்….

முகநூல் பகிர்வு… Venkatesh Ogun






இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்

திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

8 Comments
  1. பெருமுயற்சி.
    வாழ்த்துகள்.

  2. நல்லது அண்ணா

  3. சிறப்பான செய்கை ஆளுமைகளுக்கு வாழ்த்துக்கள் வாழ்க மருது குலம்

  4. உங்கள் முயற்சி பெரும் #வெற்றி பெற..நெஞ்சார இறைவனை வேண்டுகிறேன்.. நான் இந்த சமுதாயத்தில் பிறந்த ஒரு சாதாரண மனிதனாக..உங்களுக்கு மனமார்ந்த #நன்றியை வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன்..!🙏🙏🙏

  5. வாழ்த்துக்கள் அண்ணா

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?