நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு- மனிதன் என்றால் மானம் வேண்டாமா?
———————————
“எவன் ஒருவன் அநீதியை கண்டு போராடாமல் இருக்கிறானோ அவன் அந்த அநீதிக்கு துணை போகிறான் ” -மார்டின் லூதர் கிங் ஜீனியர்
அநீதி வருகிற போது “உங்கள் கைகள் கொண்டு தடுங்கள் இல்லையேல் நாக்கைக் கொண்டு தடுங்கள் இல்லையேல் மனசார வெறுத்து ஒதுக்குங்கள்” என்பார்கள் .
ஆனால் அகமுடையார் சமுதாயத்தையே அழிக்க வருகின்ற தேவர் அரசாணைக்கு எதிராக எதையும் செய்யாமல் மெளனமாகவே இருக்கின்ற கண்டும் காணாமல் கடந்து செல்கின்ற அகமுடையார்களை காணுகின்றவர்களை பார்க்கும் போது
மானமே வாழ்வு தானமே தவம் என்று கூறியும்
ஆயிரம் ஆண்டுகள் அடிமையாய் வாழ்வதை விட சுதந்திரமாக வாழ போராடி சாவது மேல் என்று வாழ்ந்து காட்டினாரே மருதுபாண்டியர் அவர்கள் வழிவந்தவர்களா நீங்கள்?
நீங்கள் மானமுள்ளவர்களாக இருந்தால் உங்கள் எதிர்ப்பை
மனுவாக அரசிற்கு கொண்டு செல்லுங்கள். பேஸ்புக் போன்ற பொது ஊடகங்களில் வெளிப்படையாக எதிர்த்து கருத்துக்களை பதிவு செய்யுங்கள். முடிந்தவர்கள் கடுமையான கண்டணங்களையும் ஆர்பாட்டங்களையும் நடத்த வேண்டும்.
அதைவிடுத்து அமைதியாக மெளனமாக இருப்பது அந்த அநீதிக்கு துணை போவதற்கு சமம்!
நான் பேச வேண்டாமென்று தான் நினைத்தேன் ஆனால் அகமுடையார் சங்கங்களின் தொடர்ந்து வரும் மெளனத்தை பார்த்தவுடன் சொல்லவே தோன்றுகிறது.
அகமுடையார் சங்கங்களில் உறுப்பினராக உள்ள அகமுடையார்களே! தேவர் அரசாணைக்கு எதிர்ப்பை உங்கள் அமைப்பு பதிவு செய்ததா? பதிவு செய்த ஆதாரத்தை கேளுங்கள்! அப்படி செய்யாத அமைப்புகளிடம் இருந்து விலகி விடுங்கள்!
அகமுடையார் சாதியையே அழிக்க வரும் இந்த அரசாணையை எதிர்த்து ஒரு மனு கூட அளிக்க முடியாத அல்லது ஓர் கண்டணத்தை கூட பதிவு செய்ய முடியாத அமைப்பா உங்களுக்காக உழைக்க போகிறது! ஆபத்து நேரத்தில் காப்பாற்ற போகிறது???
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
That’s true sar
We are surrounded
Look where we are today we are the poorest community lost the kingdom and political power but for sure relative
If we failed to United today there is no tomorrow.
Tq