மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் கவனத்திற்கு!!!
முதல்வராக பொறுப்பேற்ற பிறகு மக்கள் நலன் சார்ந்து பல்வேறு செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் முதல்வருக்கு பாராட்டுகள்.மேலும் கடந்த காலங்களில் திராவிட கட்சிகள் செய்த அல்லது செய்யத்தவறிய விடயங்களை உங்கள் கவனத்திற்கு முன்வைக்கின்றோம்.விரைவில் அந்த விடயங்களில் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று பனிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
1) துளுவ வேளாளர் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் :
கடந்த திமுக ஆட்சியில் சபரீசன் தனது அடிவருடிகளின் பேச்சை கேட்டு அகமுடையார் பேரினத்தின் ஒரு பிரிவான துளுவ வேளாளர்களுக்கு பிரத்தியேக சாதி சான்றிதழ் எண்னை வழங்கி எங்களுக்குள் பிரிவினை ஏற்படுத்த முயன்றுள்ளார்.வரலாற்று ரீதியாக தெள்ளத்தெளிவாக துளுவ வேளாளர் என்பது அகமுடையார் பேரினத்தில் பல பிரிவுகளில் ஒன்று என்பதற்கான குறிப்புகள்,ஆவணங்கள் உள்ள நிலையில்,சம்மந்தப்பட்ட துளுவ வேளாளர் பிரிவை சேர்ந்த மக்களிடம் கருத்து கேட்காமல்,வரலாற்று ஆய்வாளர்களை கலந்தாலோசிக்காமல்,அரசு இயந்திரம் தன்னிச்சையாக எடுத்த முடிவு என்பதால்,ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் பிறப்பிக்கப்பட்ட துளுவ வேளாளர் அரசாணையை தாமதமின்றி உடனடியாக தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.மேலும் எதிர்வரும் சாதிவாரி கணக்கெடுப்பின் போது இது மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அகமுடையார் பேரின மக்கள் தொகையில் சரிவு ஏற்பட்டுவதற்கு அதிகமான சாத்தியக்கூறுகள் உள்ளன.நிலையை உணர்ந்து அரசு துரிதமாக செயற்பட வேண்டும் என்று மீண்டும் ஒரு முறை கேட்டுக் கொள்கிறோம்.
2) வன்னியர் இட ஒதுக்கீட்டை பரிசீலனை செய்ய வேண்டும் :
1980கள் தொடங்கி கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளாக ஒரு இனம் தங்களுக்கான பிரதிநிதித்துவம் வேண்டி உண்ணாவிரதம்,சாலை மறியல்,மனித சங்கிலி,அறப்போராட்டம்,கவன ஈர்ப்பு கூட்டம்,கீழவை நீதிமன்றம்,மேலவை நீதிமன்றம் என்று தங்களுக்கு தெரிந்த அனைத்து வகையிலும் போராடி வருகிறது.
திமுக,அதிமுக ஆளும் கட்சியாக இருந்த போதிலும்,திமுக,அதிமுக,தேமுதிக,காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்கட்சியாக இருந்த போதிலும் எந்தவொரு கட்சியும் ஆக்கபூர்வமான முறையில் அவர்களின் போராட்டத்தை அணுகவில்லை.வன்னியர் சமூகத்தினரின் உணர்வுகளை குறைந்தபட்சமாக கூட மதித்தாக தெரியவில்லை.கருணாநிதி மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற பட்டியலை அறிமுகப்படுத்தி இரத்தம் சிந்திய வன்னியர் உடன் சேர்ந்து 107 சாதிகளுக்கு இட ஒதுக்கீடு செய்தார்.நிரந்தர தீர்வாக இல்லையென்றாலும் தற்காலிக தீர்வாக அது இருந்து வந்தது.
2011ஆம் ஆண்டு ஜனார்த்தனம் ஆணையம் அளித்த அறிக்கையின் படி வன்னியர் சமூகத்தினர் 12 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினாலும் சரி,அல்லது புதிய ஆணையத்தை அமைத்து அவர்கள் கொடுக்கும் பரிந்துரைக்கு இசைவு தெரிவித்தாலும் சரி,நல்லதொரு முடிவிற்காக வன்னியருடன் சேர்ந்து ஒட்டுமொத்த தமிழ் குடிகளும் காத்துக் கொண்டிருக்கின்றோம்.
இனியும் வன்னியர் சாதியை தேர்தலுக்கு வாக்களிக்கும் வாக்கு வங்கியாக பார்க்கும் கீழ்த்தரமான அரசியலுக்கு முடிவுரை எழுதுவோம்.
3) தேவேந்திர குல வேளாளர்களின் பட்டியல் வெளியேற்றம் :
தேவேந்திரர் மக்களின் நீண்டகால கோரிக்கைகளில் முதன்மையானதாக உள்ள பட்டியல் வெளியேற்றத்தை சாத்தியப்படுத்தி வரலாற்றில் முதல்வர் விஜய் அவர்கள் தங்கள் பெயரை நிலை நிறுத்த வேண்டும்.
பட்டியல் வெளியேற்றம் என்பது பல லட்சம் தேவேந்திரர் சமூக மக்கள் தங்களின் உரிமையாகவும்,தங்களின் நிலைப்பாடு என்றும் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.அப்படி இருந்தும் திராவிட கட்சிகள் அதனை ஒருபோதும் பொருட்படுத்தாது அமைதி காத்து வந்தனர்.நாம் தமிழர் உள்ளிட்ட தமிழ் தேசிய கருத்தியலை கொண்டுள்ள கட்சிகளும்,பலதரப்பட்ட தேவேந்திர குல வேளாளர் அமைப்புகளும் தான் இடைவிடாமல் இந்த கோரிக்கையை முன்வைத்து பேசுகின்றனர்.
முதல்வர் அவர்கள் தேவேந்திர குல வேளாளர் சமூக பிரதிநிதிகள்,வரலாற்று ஆய்வாளர்கள்,சட்ட வல்லுநர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் ஆலோசனை செய்து சாதக/பாதகங்களை கருத்தில் நிறுத்தி எந்த வகையிலும் தேவேந்திரர் மக்களின் வாழ்வாதாரத்திற்கு பின்னடைவு ஏற்படாத வகையில் விரைவில் ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று பனிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
4) ஆதித்தமிழர் பெயர் மாற்றம் :
திராவிடம் என்பது நீர்த்துப்போன அரசியல்,உண்மையான திராவிட இயக்கம் என்பது அறிஞர் அண்ணா மறைவோடு மறைந்து விட்டது.இன்றுள்ள போலி திராவிடத்தை மக்கள் விரும்பவில்லை.அப்படி இருக்கும் போது எதற்காக அவர்களின் முந்தைய காலாவதியான ஆதி திராவிடர் பட்டம்.
கேரளா,கருநாடக,ஆந்திர பிரதேசம்,தெலுங்கானா உள்ளிட்ட எந்த நிலப்பரப்பிலும் ஆதி திராவிடர் என்று சாதி சான்றிதழ் வழங்கப்படுவதில்லை.தமிழர்களுக்கு மட்டும் ஏன் இந்த இழிநிலை.எனவே இதுமுதல் ஆதித்தமிழர் என்ற பெயரில் பட்டியல் சமூகங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கி இராஜராஜ சோழன் போல் முதல்வர் விஜய் அவர்களும் ஆயிரம் ஆண்களுக்கு பின்னர் வரலாற்றிலும்,தமிழர் மனங்களிலும் நீங்காத இடம் பிடிக்க வேண்டும்.கால நேரத்தை கருத்தில் கொண்டு மேலும் தாமதிக்காமல் உடனடியாக இந்த பெயர் மாற்று அரசாணையை தமிழக அரசு பிறப்பிக்கும் என்று நம்பிக்கையுடன் இந்த கோரிக்கையை முன்வைக்கின்றோம்.

இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
