@followers மிகவும் சிறப்பாக நடந்த நெல்லிக்குப்பம் அகமுடையார் துளுவ வேளாளர் சங்க கூட்டமும் – அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகளும்(நமது அனுபவங்கள்)
—————-
கடலூர் மாவட்டம்,பண்ருட்டி வட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் ஊரில் அகமுடையார் துளுவ வேளாளர் சமுதாயக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக் கிழமை( 17-08-2025 ) அன்று அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.
அகமுடையார் ஒற்றுமை சார்பில் நானும் ( சக்திகணேஷ் -மதுரையில்) இருந்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்வில் அகமுடையார் சாதியின் உட்பிரிவாகிய துளுவ வேளாளர் பற்றிய ஒர் அறிமுக உரையை செய்தேன்.
நிகழ்வில் கண்டு வியந்த சில விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நிகழ்வு காலை பத்து மணி என்று அறிவித்திருந்தது போலவே சமுதாய மக்கள் அதற்கும் முன்பே வரத்தொடங்கி விட்டனர். சரியாக 10 மணிக்கு பெரும்பாலான அனைவரும் நிகழ்ச்சிக்கு வந்துவிட்டனர்.
கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்கள் வந்து கூட்டம் தொடங்குவதற்கு 11 மணி ஆன போதும் ,எவரும் எங்கும் நகராமல் பொறுமையோடு காத்து இருந்தனர்.
அரங்கம் முழுவதும் நிறைந்து அதன் பின்னர் சிலர் நின்று கூட கூட்டத்தை பொறுமையோடு ஆர்வமாக கவனித்தனர்( இப்பதிவின் புகைப்படத்தில் கூட கூட்டத்தின் ஆரம்ப புகைப்படத்தின் கூட்டம் மட்டுமே காட்டப்பட்டுள்ளது ஆனால் அதையும் தாண்டி திரளான கூட்டம் வந்திருந்தார்கள் என்பதுவே உற்சாகமூட்டும் உண்மை)
நிகழ்ச்சியில் பெண்களும் குழந்தைகளும் நிறைய பேர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்கள் பேசும் போது சமுதாய மக்கள் ஆர்வமாக கேட்டதோடு, நன்றாக கைதட்டி உற்சாகமும் அளித்தனர்.
இதெல்லாம் சமுதாய கூட்டங்களில் காண முடியாத காட்சிகளாக மாறி விட்டன. ஆனால் இத்தகைய சமுதாய உணர்வான, பண்பான குணம் என்பது மற்றவர்களுக்கும் ஒர் பெரும் பாடமாக உள்ளது.
இப்போது நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களை பற்றி பேசினால்…
நெல்லிக்குப்பம் அகமுடையார் துளுவ வேளாளர் உறவுகள் கூட்டத்தை மிகவும் அழகாக நடத்தினார்கள்.
கூட்டம் தொடங்கும் போது சிறப்பு அழைப்பாளர்கள் குறித்த சிறப்பான அறிமுகத்தை அன்புச் சகோதரர் திரு.ஜெயகாந்தன் அகமுடையார் அவர்கள் வழங்கினார்கள்.
வந்திருந்த சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
நிகழ்ச்தியின் இறுதியில் அருமையான அசைவ விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது மிகவும் தரமாகவும், சுவையாகவும் இருந்தது என்பதையும் இங்கே குறிப்பிடத்தான் வேண்டும் .
எல்லாவற்றுக்கும் மேலாக கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் தாங்கள் முதலில் சாப்பிட்டு விடவேண்டும் என்று எண்ணாமல் உற்சாகமாக பரிமாறி ,முதலில் வந்தவர்களை சாப்பிட வைத்து ,வந்தவர்கள் அனைவரும் சாப்பிட்ட பிறகு கடைசியாகவே அவர்கள் உணவருந்தினார்கள். மிகவும் பாராட்டத்தக்க குணம்.
நமது நன்றிகள்
———-
நானும் ,திரு.பாலமுருகன் அகமுடையார் அவர்களும் மதுரையில் இருந்து சேர்ந்து வந்தோம்.
நெல்லிக்குப்பம் வந்தவுடன் அண்ணன் திரு.சக்தி பிரபாகரன் அவர்கள் வீட்டிற்கு அழைத்தார்கள். மண்டபத்திலேயே தயாராகி இருக்கலாம். இருப்பினும் அண்ணன் அவர்கள் உரிமையோடு அவரது வீட்டில்
தயாரக சொன்னதுடன்
மிகவும் கனிவோடு அன்போடு சுவையானதொரு காலை உணவு தயாரித்து(தாயாரித்து ) கொடுத்தார்கள். அவர்களுக்கு நமது நன்றிகள்!
ஒவ்வொருவரும் மிகவும் உற்சாகமாக பணியாற்றினார்கள்.
மேலதிக தகவல்
—————
நிகழ்ச்சி நிறைவடைந்த பின்பு , நிகழ்வில் கலந்து கொண்ட அகமுடையார் சமுதாய தலைவர்களின் கூட்டம் நெல்லிக்குப்பம் பிரமுகர் அண்ணன் திரு.ராஜ்குமார் அவர்களின் வீட்டில் நடந்தது.
நிகழ்வில் வடதமிழகத்தில் அகமுடையார் சமுதாய தலைவர்கள் இணைந்து செயல்பட்டு சமுதாயத்தை வளர்ப்பது பற்றி பேசப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு பின் அண்ணன் திரு.ராஜ்குமார் அவர்களின் வயலின் நடுவில் உள்ள வேறு ஒர் அறையில் சென்று ஓய்வெடுத்தோம். அண்ணன் அவர்கள் உரிமையோடு நிறைய செய்திகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது.
இவர்கள் இருவர் வீட்டிற்கும் சென்றிருந்த போது தந்தை சொல்லை கேட்டு ஒவ்வொரு வேலையும் தவறாமல் செய்ததை கவனித்தோம்.
பிள்ளைகள் எப்படி பொறுப்பாக வளர்த்திருக்கிறார்கள் என்று எண்ணுகிற அதே நேரத்தில் ,பிள்ளைகள் படித்து நல்ல வேலையில் இருந்தாலும் அவர்கள் தங்கள் தந்தையின் பேச்சை எப்படி தட்டாமல் கேட்டு வேலை செய்கிறார்கள் என்பதையும் கவனித்து வியப்படைந்தோம்.
இது போன்று நிகழ்ச்சியில் நடந்த பலவிசயங்களை சொல்ல வேண்டுமா என்று கேட்க வேண்டாம் .
இவற்றயேல்லாம் தெரிந்து கொள்ளும் போது தான் ,நிகழ்ச்சிகளை எப்படி நடத்த வேண்டும் , பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் போன்ற பல்வேறு படிப்பினைகளை நாம் அறிந்துகொள்ள முடியும்.
இத்தகைய பண்புகளை நாமும் பிள்ளைகளுக்கு சொல்லி வளர்க்க வேண்டும். அப்போது தான் அவர்கள் பொறுப்பானவர்களாக வளர்வார்கள்.
முக்கிய குறிப்பு ஃ இப்பதிவில் இன்னும் நிறைய பெயர்களை குறிப்பிட வேண்டும். ஆனால் நிறைய பெயர்களை ம்றந்துவிட்டேன். இதெல்லாம் எனது மறதியினால் நடக்கிறதே அன்றி அவர்களை தவிர்த்து விட்டேன் என்பதை உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும்.
அகமுடையார் பேரினமாக ஒன்றினைவோம்!





இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
