First
102ம் பிறந்த தினம் இன்று
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த பாட்டனார் தியாகி. T.G.ஜெயராமன்(மருது வம்சம்) INA அவர்களின் 102ம் பிறந்த தினம் இன்று (21.03.2023)
அவரை பற்றி நினைப்பதில் பெருமை கொள்கிறோம்.
இந்திய விடுதலைக்கு வெளி தேசத்தில் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி வெள்ளையனை கதி கலங்க செய்த நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் படையில் சேர்ந்து தமிழ்நாட்டில் முதல் ஆளாய் ரத்தத்தில் கையெழுத்திட்ட மற்றும் இன்று ஸ்ரீ்புரம் அருகில் உள்ள தனது சொந்த நிலத்தை நேதாஜி படைக்கு ஆயுதங்கள் வாங்க இலவசமாக கொடுத்துவிட்டூ நேதாஜி படையில் சேர்ந்தவர். ராக்கெட் பாராசூட் பிரிவில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய சுதந்திர போராட்ட வீரர்.,
*தெ.கோ.ஜெயராமன் *
அவர்களின் 99-வது ஆண்டு (21.03.1921) பிறந்தநாள்.
அன்னார் சேவை பற்றிய வரலாற்றை கண்டு.,
மாண்புமிகு, டாக்டர் A.P.J.அப்துல்கலாம் டெல்லி குடியரசு மாளிகைக்கு நேரில் அழைத்து கௌரவித்தார்.
அதேப்போல் இவரது சேவையை பாராட்டி, மத்திய அரசு தாமரை பட்டையமும் விருதும் அளித்து மாவட்ட அளவில் பல கல்வி நிருவனங்கள், வியாபாரி சங்கங்கள், பல ரோட்டரி சங்கங்கள், மாவட்ட தலைவர்கள்., போன்ற பலதரப்பட்ட மக்கள் குழுமங்களால் புகழாராம் செய்யப்பட்டவர் என்பதால் பெருமை கொள்கிறோம்.
புகழ் வணக்கம்.! வீரவணக்கம்.!!
தகவல்
மாமன்னர் மருதுபாண்டியர்கள் நற்பணி மன்றம் &அறக்கட்டளை மாநில தகவல் தொழில் நுட்ப துறை
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்