ஆந்திர மாநிலத்தின் தமிழர் தளபதி அண்ணன் புல்லட் சுரேஷ் அவர்கள் மீதான பொய்வழக்கை …

Spread the love

ஆந்திர மாநிலத்தின் தமிழர் தளபதி அண்ணன் புல்லட் சுரேஷ் அவர்கள் மீதான பொய்வழக்கை வன்மையாக கண்டிக்கின்றோம்!
————-
ஆந்திர பிரதேச முதலியார் அமைப்பின் தலைவராக இருப்பவர் அண்ணன் திரு.டி.ஜி. புல்லட் சுரேஷ் அகமுடையார் அவர்கள்.

ஆந்திர மாநிலத்தில் சாதி சமய வேறுபாடு இல்லாமல் அனைத்து மக்களுக்கும் நல்ல பல ஆக்கப்பணிகளை செய்து மக்கள் மத்தியில் புகழ்பெற்று விளங்குவர்.

குறிப்பாக குறிப்பாக சித்தூர் பகுதியில் வாழும் தமிழர்களின் குரலை ஒலிப்பவராகவும் அவர்களின் பாதுகாப்பாகவும் விளங்குவர் அண்ணன் திரு.டி.ஜி. புல்லட் சுரேஷ் அகமுடையார் அவர்கள்.

விடுதலை போராட்டத்தின் விடிவெள்ளிகள் மாமன்னர்கள் மருதுபாண்டியர்களுக்கு சில மாதங்கள் முன்பு ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாநகரில் கம்பீரமாக சிலை எடுத்து சிறப்பு செய்தவர் தான் நமது அன்பு அண்ணன் திரு.டி.ஜி. புல்லட் சுரேஷ் அகமுடையார் அவர்கள்.

இந்நிலையில் அண்மையில்
பிரம்மஞான சபை எனும் தியாசாபிகல் சொசைட்டி எனும் அறக்கட்டளைக்கு நல்ல எண்ணத்தில் சிலர் கொடுத்த சொத்துக்களை சில தனிநபர்கள் அபகரிக்க முயற்ச்சித்துள்ளனர்.
இதை கண்டறிந்த அண்ணன் புல்லட் சுரேஷ் அவர்கள் இந்த முறைகேடு குறித்து ஊடகங்களில் அம்பலப்படுத்தி இருக்கிறார்கள்.

அதோடு நிற்காமல் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தும் இருக்கிறார்கள் .

இந்நிலையில் அண்ணன் புல்லட் சுரேஷ் அகமுடையார் மீது ஆந்திர மாநிலத்தில் போலியான புகார் ஒன்றை அளித்து அண்ணன் அவர்களது பெயருக்கு களாங்கம் ஏற்படுத்துவதற்காகவும் , அரசியலில் இருந்து அவற்றை வெளியேற்றவும் முயற்சி செய்து வருவதாகவும் தெரிகின்றது.

இந்த செயலை தமிழ்நாடு மற்றும் உலகம் முழுதும் வாழும் அகமுடையார் பேரினம் சார்பாக வன்மயாக கண்டிக்கின்றோம்!

பொது சொத்தை சூறையாடுவதை தட்டிக்கேட்டால் போலி வழக்கு பதிவதோ?

இது போன்ற போலி வழக்குகளால் அண்ணன் புல்லட் சுரேஷ் போன்ற போராளிகளின் மக்கள் பணிகளை தடுத்து விட முடியாது!

இது ஆந்திர மாநிலத்தில் இருக்கும் தமிழ் ஆளுமைகளை பலவீனப்படுத்தி தமிழர் உரிமைக்குரலை ஒலிக்காமல் அதன் தமிழரின் குரல்வலையை நெரிக்கும் கொண்டு சேர்க்கும் ஆபத்தில் கொண்டு சேர்க்கலாம். இச்செயலை தமிழர்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும்!

ஆந்திரப் பிரதேச அகமுடையார் (துளுவ வேளாளர் உட்பட) சங்கமும் மற்ற பல அமைப்புகளும் இது குறித்து கண்டண அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிறைவாக ஒன்று சொல்லிக்கொள்கிறோம்!
புல்லட் சுரேஷ் அவர்கள் தனிநபர் அல்ல உலகம் முழுவதும் பரவி வாழும் கோடிக்கணக்கான அகமுடையார் பேரினத்தின் முக்கிய பிரதி நிதிகளில் ஒருவர்!
அதுமட்டுமல்ல அவர் தமிழ் இனத்தின் குரலாக ஒலிப்பவர்.

அண்ணன் புல்லட் சுரேஷ் அவர்கள் தமிழ் சமுதாயத்தின் பிரதிநிதி! ஆகவே அவருக்கு எதிராக செய்யப்படும் இது போன்ற போலி வழக்குகளை வன்மையாக கண்டிக்கின்றோம் என்பதோடு இது போன்று அண்ணன் புல்லட் சுரேஷ் அவர்களின் மீது போலியாக வழக்கு மற்றும் எதிராக செயல்படுவர்கள் தமிழர்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்பதையும் அவர்கள் தமிழர்களின் எதிர்ப்பையும் எதிர்கொள்வார்கள் என்பதையும் இங்கு நினைவுபடுத்துகிறோம்!





இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo