First
தென்ன கங்க தேவனார் எனும் அகம்படியார் திருமேலாழியான்ட நாயனாருக்கு(இறைவனுக்கு) அளித்த தேவதானம்(வரி இல்லாத நிலக்கொடை) .ஏற்கனவே இதே அகம்படியார் மற்றொரு கோவில் பூசைகள் நடைபெற அளித்த திருவிடையாட்டம் (வைணவக் கோவிலுக்கு அளிக்கப்படும் நிலக்கொடை) பார்த்தோம்!
இந்த நிலத்தில் இருந்து வரும் வருமானத்தைக் கொண்டு , இறைவனுக்கும் அவர் தேவிக்கும்(இறைவி,பிராட்டிக்கும்) ,கோவிலில் உள்ள விநாயகப்பிள்ளையாருக்கும் ,எல்லாம்தருவான் சந்தி பூஜைக்கும்,உச்சி சந்திக்கும் உணவமுது தினமும் படைக்க கொடையளித்துள்ளான்.
காலம்: 13ம் நூற்றாண்டு
கல்வெட்டு கண்ட இடம்: மதுரை-மேலூர்- அருவிமலை மீதுள்ள சிவன் கோவில்.
செய்தி: மதுரை மாவட்ட கல்வெட்டுத் தொகுதிகள் ,கல்வெட்டு எண்; 67/2003-தமிழக தொல்லியல் துறை வெளியீடு!
கோவில்களுக்கு அதிக நிலக்கொடைகளை வழங்கியதில் இருந்து இவன் சிறந்த பக்தியாளன் என்பது புரிகிறது!
தென்ன கங்க தேவனின் முன்னர் வெளியிட்ட கல்வெட்டை பார்க்க விரும்புகிறவர்கள்.கீழே இருக்கும் லிங்கை அழுத்தி பார்க்க முடியும்!
http://www.agamudayarotrumai.com/2416




இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
