First
சற்று முன் ஆரணி மருசூரைச் சேர்ந்த திரு.கணேசன் அகமுடையார் அவர்கள் ரூபாய் 500 வழங்கியுள்ளார்கள்! கடந்த 5 மாதங்களுக்கு முன் ஏற்பட்ட சாலை விபத்து ஒன்றில் பேருந்துச் சக்கரம் ஏறி இவரது கால் பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த 5 மாதங்களாக வேலைக்குப் போக முடியாத நிலையிலும் பலவித பொருளாதாரச் சிக்கல் மிகுந்த நிலையிலும் அவர் இந்த பணத்தை நமக்கு அனுப்பியுள்ளார். முன்னமே தெரிந்திருந்தால் அவர் உடல் நலம் தேறியவுடன் பணம் அனுப்பச் சொல்லியிருப்போம்.
தற்போது தான் இவர் உடல் நலம் தேறிவருகிறார்.அவர் உடலும் மனமும் நல்லபடியாக தேற இறைவன் அருள்வானாக!
இத்தகைய நிலையிலும் பணம் அனுப்பியிருக்கும் அவரது சமுதாய உணர்வை கண்டு தலைவணங்குகிறோம்! இப்படிப்பட்ட கடினமான சூழ்நிலையில் சேகரிக்கப்படும் பணத்தை முறையாகவும் ,மிகவும் சரியாகவும் செலவளிப்போம்! அகமுடையார் வரலாற்று மீட்பு தொடரும்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்