முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் மாமன்னர் மருது பாண்டியர்கள் அவர்களின் 2…

Spread the love

First
முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள்
மாமன்னர் மருது பாண்டியர்கள் அவர்களின்
222 ஆம் ஆண்டு குருபூஜை விழா
திருத்தணியில் நடைபெற்றது..

திருத்தணி. அக்.24.

வெள்ளையனை எதிர்த்து போராட்ட களத்தில் இந்தியாவில் முதல் முதலாக சுதந்திரத்திற்காக போராடி உயர்நீர்த்தவர்கள் சிவகங்கை மன்னர்கள் மருதுபாண்டி சகோதரர்கள்.
அதன் தாக்கத்தால் தொடர்ந்து தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் சுதந்திர தீ. பிழம்புகள் பற்றி எரிந்தது இந்தியா சுதந்திரத்தில் மருதுபாண்டி மன்னர்களின் பங்கு மிக. முக்கியமானதாகும். மறைந்த மருதுபாண்டிய சகோதரர்கள் தியாகத்தை போற்றும் வகையில் தமிழக அரசு ஆண்டுதோறும் அவர்களுக்கு மரியாதை செய்து கௌரவிக்கிறது.
இதில் ஒரு கட்டமாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியில் அகமுடைய முதலியார் சங்கம் சார்பாக ஆண்டுதோறும் மறைந்த அந்த மாமன்னர்களின் தியாகத்தை போற்றும்.வகையில். குரு பூஜை விழாவாக சிறப்பாக நடத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு. அந்த மாமன்னர்களின் 222 ஆம் ஆண்டு குரு பூஜை. என்பதால்.திருத்தணி அகமுடையார் சங்கம் அமைப்பின் சார்பாக சிறப்பாக நடத்தினர். திருத்தணி நகராட்சி அலுவலகம் அருகில் அலங்கரிக்கப்பட்ட மருது பாண்டி சகோதரர்களின் திருவுருவபடத்துக்கு மலர் தூவி வீரவணக்கம் சொல்லி மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கினர்.

தலைமைநிறுவனர் அக்ரி சதீஷ். தலைமை ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ஜெகதீசன். முனுசாமி. தர்ம பிரகாசம். எம். ஆர். எப். செல்வராஜ். இராமசாமி. மற்றும்
தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள்.
ராஜ்குமார். செல்வம். மோனிஷ். ஹரி பாபு. ஐயப்பன். சதீஷ். பாலாஜி. . பரத். மற்றும் இந்த அமைப்பு சேர்ந்தவர்கள் இணைந்து விழாவை சிறப்பாக செய்திருந்தனர். நடைபெற்ற குரு பூஜை விழாவில். வழக்கறிஞர் தியாகராஜன்.
. ஓய்வு பெற்ற.முருகன் கோயில் அதிகாரி மோகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதிமுக சார்பாக முன்னாள் நகராட்சி தலைவரும் அக்கட்சி நகர செயலாளருமான. டி. சௌந்தர்ராஜன் கலந்துகொண்டு மலர் தூவி. மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில்.
மறைந்த மருது சகோதரர்கள் . இந்தியாவின் முதல் விடுதலை வீரர்களாக சுதந்திரத்திற்காக போராடி.
.உயிர் நீத்த அந்த மாபெரும் தலைவர்களின் தியாகத்தைபாராட்டி. இந்த வரலாறுகளை எதிர்காலத்தில் இளைஞர்கள் தெரிந்து கொள்வதும் அடையாளம் காட்டுவதும் அவசியம்.
எனவும் புகழாரம் சூட்டி னர்..
இதில் திருத்தணி . இராமஞ்சேரி. தோம்பூர். நாகப்பூண்டி. R.k பேட்டை
பி.டி.புதூர். பேரம்பாக்கம்
மேட்டுப்பாளையம். சவுட்டூர்,புதூர், குடியானவன்தெரு. பூண்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சேர்ந்த அகமுடைய முதலியார் சங்கத்தை சேர்ந்தவர்கள்.
மற்றும் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்..

#222வதுகுருபூஜைவிழா
#thiruttaniyindhinaoli #thiruvallurdistrict #மருதுபாண்டியர் #tamilnadu #திருத்தணி #TNGovt







இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்

திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo