தேவி கருமாரியம்மன் பூப்பல்லக்கு ஊர்வலம் -வேலூர் சேர்வை அகமுடையார்கள்
——————————————-
வேலூரில் அகமுடைய முதலியார்கள் (அகமுடையாரில் முதலியார் பட்டம் கொண்டவர்கள்) மற்றும் துளுவ வேளாளர் (அகமுடையார்) சமுதாய தலைவர்கள் “சேர்வை” என்று அழைக்கப்படுவதை 1919-1920 ஆண்டுகளிலேயே பதிவு செய்திருந்ததை ஏற்கனவே அகமுடையார் ஒற்றுமையால் பதிவு செய்திருந்தோம் அல்லவா
இந்நிலையில் ஜீலை 29ம் நாள்
வேலூர் வேலப்பாடி சேர்வை முனிசாமி நகர் விநாயகம் சாலையில், அரசன் வேம்பு மேடையில் அமைந்துள்ள தேவி கருமாரியம்மனுக்கு 14-ம் ஆண்டு கூழ்வார்க்கும் திருவிழா நடந்தது. நேற்று காலை அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு அபிஷேகம், பூ கரகம், தாரை தப்பட்டை, கெட்டி மேளம் முழங்க, உற்சவர் தேவி கருமாரியம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூப்பல்லக்கு திருவீதி உலா நடந்தது. பின்னர் அம்மனுக்கு கூழ்வார்த்தலும், பொங்கல் வைத்தும் பக்தர்கள் வழிபட்டனர்.
பார்க்க : இணைப்பு படம் 1
சிறப்பு விருந்தினராக கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். பூப்பல்லக்கு ஊர்வலத்தை சரவணமூர்த்தி முதலியார், முன்னாள் கவுன்சிலர் சத்தியமூர்த்தி, கவுன்சிலர்கள் எழிலரசன், அஸ்மிதாகோபிநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பூப்பல்லக்கு ஊர்வல ஏற்பாடுகளை மண்டி டி.ஜெயபிரகாஷ் மற்றும் விழா அமைப்பாளர்கள் கோபிநாதன், டாக்டர் பிரகாஷ் அய்யப்பன், மண்டி ரமேஷ்பாபு, சத்யநாராயணன், சரத், ஆறுமுகம், ரஜினிகாந்த் மற்றும் பேட்டை வாசிகள் செய்திருந்தனர்.
குறிப்பு:
அகமுடைய முதலியார்கள் (அகமுடையாரில் முதலியார் பட்டம் கொண்டவர்கள்) மற்றும் துளுவ வேளாளர் (அகமுடையார்) சமுதாய தலைவர்களாக குறிக்கப்படும் சேர்வை பற்றிய வரலாற்று தகவல்கள் மற்றும் இப்போதும் இருக்கும் அடையாளங்களை இணைப்பு படங்களில் காணலாம்.
ஏற்கனவே செய்திருந்த பதிவு லிங்க்: பார்க்க இணைப்பு: https://www.facebook.com/100063919813164/posts/530562025751120
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்