மாணவி பவானிக்கு மீண்டும் ஒரு உதவி ரூபாய் 10,000 நிதி அளித்த சமுதாய உணர்வுள்ள பெயரை வெளியிட விரும்பாத தம்பி
________________________________
மாணவி பவானி அவர்களைப் பற்றி அகமுடையார் ஒற்றுமையில் நேற்றைய நம் பதிவை பார்த்துவிட்டு சற்று முன் அகமுடைய சமுதாயத்தைச் சேர்ந்த தம்பி ஒருவர் மாணவி பவானிக்கு ரூபாய் பத்தாயிரம் அனுப்பி உள்ளார்.
அவருக்கு அகமுடைய ஒற்றுமை சார்பில் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
பணம் அனுப்பிய தம்பி எனது பெயரை வெளியிட விரும்பவில்லை . மேலும் அந்த தம்பியோட வயதோ 23 தான்.
இந்த இளம் வயதில் வந்து சமுதாய உணர்வோடு சரி கல்வியோட முக்கியத்துவம் அறிந்தும் சரி இந்த உதவி செய்திருக்க கூடிய அவரை நாம் மனமார்ந்த பாராட்டணும்.
இப்பதிவில் மாணவிக்கு பணம் அனுப்பிய ஸ்க்ரீன் ஷாட் இணைத்துள்ளோம்.
மேலும் மாணவி பவானியின் வங்கி கணக்கில் பணம் சேர்ந்ததை உறுதி செய்துகொள்ளும் வகையில் மாணவி மற்றும் அவருடைய உறவினர் வாட்ஸ் அப்பில் தெரிவித்த மெசேஜை பணம் அனுப்பி இவருக்கு தனிப்பட்ட முறையில் மெசேஜ் செய்துள்ளோம்
பணம் அனுப்பியது மட்டுமல்ல சமுதாய சமுதாயம் தொடர்பான நல்ல புரிதலோடு அந்த தம்பி இருக்கான்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
அடுத்து அடுத்து வரும் இளைய சமுதாயத்தினர், சமுதாயப் பணியை தொடர்ந்து கொண்டு செல்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு பிறக்கிறது.
இதுவரை மாணவிக்கு வழங்கப்பட்ட நிதி ( நிதி வந்த தேதி வரிசைப்படி)
அண்ணன் திரு. அருள் அகமுடையார் (சிதம்பரம்) ரூ1000
அண்ணன் திரு. சரவணன் அகமுடையார் (அமெரிக்கா) அவர்கள் ரூ10,000
திரு.முத்துக்காளை அகமுடையார் (சென்னை தொழிலதிபர் ) அவர்கள் ரூ 15,000
தலைமை அகமுடையார் முன்னேற்ற சங்கம்சார்பில் ரூ20,000
தற்போது தம்பி (பெயரை வெளியிட விரும்பாதவர்) : ரூ10,000
என மாணவி பவானி அவர்களின் மேற்படிப்பிற்கும் , விடுதி ,உணவு செலவுகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவருக்கும் அகமுடையார் ஒற்றுமை சார்பாக நன்றிகள்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்