உலகம் முழுதும் தமிழர் எச்சங்கள் குறித்த தீவிர ஆய்வுகளை செய்தவரும் , கடல்கொண்ட தமிழர் நகரங்களின் வரலாற்றை கடலியல் ஆய்வு மூலம் முன்னெடுத்த பெருமைக்கும் ,பாராட்டுதலுக்குரியவர் திரு.ஒரிசா பாலு அவர்கள்.தமிழர் வரலாற்று ஆர்வலர்கள் மத்தியில் இவரை அறியாதவரே இல்லை எனலாம் அவ்வளவு பணிகளை திறம்பட ஆற்றியுள்ளார்.
இவர் பழந்தமிழ்குடியாம் அகமுடையார் பேரினத்தில் அகம்படி (அகமுடையார்) முதலியார் பட்டம் கொண்டவர்.
இவர் நீண்ட நாட்களாக தொண்டையில் புற்றுநோயால் அவதிக்குள்ளாகியுள்ளார். தமிழர் வரலாற்றை மீட்டெடுக்க பெரும் ஆய்வுகளை மேற்கொண்ட அவர் பூரண நலம் பெற வேண்டும் என்று பிராத்திப்பதோடு , அகமுடையார் மற்றும் இதர தமிழ் சமூக ஆர்வலர்கள் அவரை தொடர்புகொண்டு அவருக்கு வேண்டிய உதவியை செய்து தரவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்!
குறிப்பு:
நிறைய பேர் திரு.ஒரிசா பாலு அவர்களை வேற்று பிரிவினர் என்று நினைத்ததால் அவரே தன்னுடைய பதிவில் தான் பழந்தமிழ்குடியாம் அகம்படி ( இன்றைய அகமுடையார்) இனத்தை சேர்ந்தவர் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்(பார்க்க திரு.ஒரிசா பாலு அவர்களின் பதிவை இணைப்பில்)
இவருடைய இப்பதிவை தன்னுடைய ப்ரோபல் பதிவில் சேர் செய்து நாம் அறியத்தந்த சகோதரர் அம்பலூர் எழில் இராவணன் அகமுடையார் அவர்களுக்கு நமது நன்றிகள்!
திரு.ஒரிசா பாலு அவர்களின் குறிப்பிட்ட பதிவு கீழே (அவருடைய சொந்த எழுத்துக்களில்)
1067 சோழ மரபின் வீரராஜேந்திரன் மகனும் இறுதி நேரடி அரசன் ஆன அதி ராஜேந்திரனுக்கு காஞ்சிபுரத்தில் தொண்டையில் கிருமியால் வந்த நோயால் கிருமி கண்ட சோழன் என்று அழைக்கப்பட்டு அவர் இறந்த பிறகு அபயன் குலோத்துங்கன் ராஜமுந்திரி கோதாவரி கரை விமலாதித்தன் குந்தவி மகன் வழி வாரிசு அபயன் குலோத்துங்கன் 1070 லவ் வருகிறார். நானும் ஒருவகையில் புற்றுநோய் கிருமி கண்டவன் தான் அதே இடத்தில் தொண்டையில் . நடுநாட்டு தமிழ் அகம்படி முதலியார் வம்ச மரபில் சோழ மரபாக கொண்டு திருச்சி உறையூரில் பிறந்ததால் . இப்போது அனுபவம் வாய்ந்த ஆயுள் வேதியர் திருமலை ஐயா ஆதுலர் மருத்துவம் பார்ப்பதால் இது பற்றிய பற்றிய நினைவு வந்தது . கடந்த ஐந்து நாட்களாக முழு நாள் சிலப்பதிகாரம் சொன்ன ஆயுள் வேதியிய மருத்துவர் நேரடி பார்வையில் ஆயுள் வேதியர் சித்த மருத்துவ புரிதல் சற்று அதிகமாக தொழில் முறை மருந்தியலில் உயிரி எரிபொருள் துறையில் இருந்தவன் என்ற முறையிலும் ஆயூஸ்பதி உலகத்தூதுவன் என்ற முறையில் மருத்துவர்கள் தொடர்பில் எப்போதும் சற்று இறையியல் மெய்யியல் பகுத்தறிவு கலந்து.எனக்கு ஆயுர்வேதிய மருத்துவரை பரிந்துரை செய்தவர் அமெரிக்கா மினசோட்டாவில் சந்தித்து சென்னையில் இருக்கும் ஐயை அனிதா குடும்பம். நலம் விரும்பிகள் சூழ இப்போது.
திரு.ஒரிசா பாலு அவர்களின் பேஸ்புக் ப்ரோபல் லிங்க்:
https://www.facebook.com/profile.php?id=100044870146620
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்