First
மதுரையில் நடந்த புத்தக கண்காட்சியில் நேற்று முன் தினம்(01-10-2022) மற்றும் நேற்று(02-10-2022) வாங்கிய நூல்கள்மற்றும் பில்கள்
——————-
நூல் விற்பனையார்கள் பெயரும்,வாங்கிய நூலின் தொகையும் (தள்ளுபடி கழித்து இறுதி விலை)
கருத்து பட்டறை: ரூ1960
காலச்சுவடு: ரூ1053
மதி நிலையம்:ரூ570
கருப்பு பிரதிகள்: ரூ200
சேகர் பதிப்பகம் :ரூ425
விஜயா பதிப்பகம்: ரூ935
தமிழக தொல்லியல் துறை: ரூ843
கெளரா பதிப்பக குழுமம் :ரூ530
விஜயா பதிப்பகம்: ரூ90
பண்டைய தடையம் :ரூ240
உலக தமிழாராய்ச்சி நிறுவனம்: ரூ200
சந்தியா பதிப்பகம்: ரூ198
பரிசல் புத்தக நிலையம்: ரூ580
கருத்து பட்டறை: ரூ315
ரிதம் புக்: ரூ522
அறம் பப்ளிகேசன்ஸ்: ரூ325
அறம் பப்ளிகேசன்ஸ்: ரூ180 (இரண்டாவது பில்)
அன்னம்: ரூ350
மதுரை பழனியப்பா பிரதர்ஸ்: ரூ207
சீதை பதிப்பகம்: 110
இன்னும் 1 அல்லது 2 பில்கள் தவறவிட்டிருக்கலாம் என்ன்று நினைக்கிறோம். அப்படி இருந்தால் அப்படி தேடிப்பிடித்து பதிவு செய்வோம்.
இருப்பினும் வெளியிட்டுள்ல பில்கள் அடிப்படையில்
நேற்று முன் தினம்(01-10-2022) மற்றும் நேற்று(02-10-2022) மட்டும்
மதுரை புத்தக கண்காட்சியில் நேரடியாக சென்று வாங்கிய நூல்களின் தொகை மட்டும் : ரூ9833
வசூலான தொகையில் இன்னும் ரூ1000 அல்லது அதற்கு சற்று மேலே மீதமிருக்கலாம். மீதமுள்ள தொகைக்கும் இன்று மாலைக்குள் நூல்கள் ஆர்டர் செய்துவிடுவோம்.
அகமுடையார் ஒற்றுமை மீது நம்பிக்கை கொண்டு நிதி வழங்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.
இந்த ஆர்டர் செய்துமுடித்தவுடன் பணம் கொடுத்த நபர்கள் , செலவு தொகை தனிப்பதிவாக வெளியிடப்படும்.
வேறு யாரேனும் நிதி அனுப்பினால் அதை இன்றைக்கு மேல் கணக்கில் கொண்டு அதற்கும் பின்னர் கணக்கு வெளியிடப்படும்.
இவ்வளவு தொகைக்கு நூல்கள் வாங்கியது வியப்பாக இருக்கலாம்.
தமிழகத்தில் புதிதாக வந்த, எண்ணிக்கையில் மிக மிக சிறுபான்மையாக இருக்கும் சாதிகளை பற்றியெல்லாம் விரிவாக பொது ஆய்வாளர்கள் நிறைய இடங்களில் குறிப்பிடுகின்றனர் ஆனால் பேரினமாகவும் ,பழந்தமிழ் குடியாகவும் இருக்கும் அகமுடையார்களை பற்றி குறிப்புகள் ஏதும் இல்லை.
உதாரணத்திற்கு மதுரையில் உள்ள சாதிகளை பற்றி தனது நூலில் குறிப்பிடும் வரலாற்றிஞர் வேத்தாசலம் என்பவரது நூலில் மதுரையில் பெரும் எண்ணிக்கையிலும் ஆளும் வர்க்கமாக இருக்கும் அகமுடையார் சாதி பற்றி குறிப்பே இல்லை.
கல்வெட்டு ,இலக்கியங்களில் மிக உயரிய இடத்தில் பேசப்படும் அகமுடையார் சாதியினர் பற்றி அகமுடையார் இனத்த்தில் பிறந்த பொது வரலாற்று ஆய்வாளர்களே குறிக்கவில்லை என்பது ஒர் குறை.
காரணம் அகமுடையார்கள் கடந்த 400-500 வருடங்களாக தங்களை வெளிப்படுத்திக்கொள்ளவேயில்லை என்பதால் இந்த இனம் இதற்கு பின்னான காலங்களில் வரலாற்றில் இருந்து புறந்தள்ளப்பட்டு விட்டது.
மறுபக்கம் அகமுடையார் சாராதவர்களும்
நம்மை(அகமுடையார்) பற்றிய செய்திகளை தொகுப்பாகவோ, அல்லது முக்கியத்துவம் அளித்தோ நூல்கள் பெரிதாக வெளியிடவில்லை என்பதாலேயே அகமுடையார் வரலாறு தேடுவது மிக மிக சவாலான விடயமாக இருக்கின்றது.
மிகவும் தேர்ந்தெடுத்து 10 வரலாற்று நூல்கள்,ஆவணங்கள் வாங்கினால் அதில் நம்மை பற்றி ஒன்றிரன்டு தகவல்கள் தான் கிடைக்கின்றன.
ஆகவே இது போன்று தேர்ந்தெடுத்த நூல்களை பெரும் எண்ணிகையில் வாங்கும் போது தான் நம்மை பற்றிய செய்திகளை தேடி ஆராய்ந்து வெளிப்படுத்த முடியும்.
இன்னும் கூட நிறைய நூல்களை நாங்கள் வாங்கவில்லை. இணையத்தில் நம்மை பற்றி குறிப்பிடும் இலங்கையில் இருந்து வரும் நூல்கள் பலவற்றை நாம் வாங்கவில்லை.
குறிப்பாக இந்திர பாலா எனும் இலங்கை வரலாற்றிஞர் எழுதிய
Evolution-Ethnic-Identity-Tamils-Lanka
எனும் நூலில் தமிழகத்தில் இருந்து சென்ற அகம்படியர் சாதியினர் அங்கிருந்த சாலகமா எனும் சாதி பெண்களை திருமணம் செய்து ஹெவப்பண்ணெ என்ற பெயரில் போர்குடி சாதியாக மாறியுள்ளனர் என்ற செய்தி பதிவாகியுள்ளதாக சிங்களத்தில் உள்ள அதே சாதியை சேர்ந்தவர்களே இணையத்தில் பதிவு செய்துள்ளனர். இது போன்ற பல செய்திகள் அந்த நூலில் இருக்கலாம் .
இலங்கை நூல் இந்தியாவில் வாங்குவதால் அந்த நூல் ரூ2000 மாக இருந்ததால் அந்த நூலை கடைசியாக வாங்குவோம் என்று வைத்துவிட்டோம். இன்னும் வாங்கவில்லை.
இது போன்ற நம்மை பற்றி செய்தி இருக்கின்றன என்று அறிந்த பல நூல்களை இன்னும் நாம் வாங்கவில்லை என்பதால் நிதி வழங்குபவர்கள் அளிக்கலாம் . எப்போதும் போல அதற்கும் நூல்களை தவறாமல் வாங்கி கணக்கு பொதுவெளியில் வெளியிடுவோம்.
நேற்று முன் தினம் (01-10-2022) சனிக்கிழமை அன்று நமக்காக புத்தங்கள் வாங்கி சேகரித்திருந்த அகமுடையார் அரண் திரு.பாலமுருகன் அகமுடையார் அவர்களுக்கு நன்றி.நேற்றும் அவர் நம்முடன் இருந்து புத்தங்கள் தேர்ந்தெடுக்க உதவினார்.
புத்தங்களை வாங்கி வருவதே பெரும் சவாலான விசயம் என்றால் அதில் உள்ள கருத்துக்களை தேடி,ஆராய்ந்து, பல்வேறு கருத்துக்களுடன் ஒப்பிட்டு ஆய்வுக்கட்டுரையாக வெளியிடுவது பெரும் சவாலான பணி
புத்தக கண்காட்சி சென்று திரும்பியவுடன் இரவு 11மணி வரை அதில் உள்ள செய்திகளை தேடி,பின் தூங்கி மறுபடி 2 மணி எழுந்து மறுபடியும் நூல்களில் உள்ள தரவுகளை எல்லாம் ஆராய்ந்துள்ளோம்.
நூல்களை வாங்கி ஆராயும் போது எனது வாழ்வாதாரத்திற்கான மற்ற வேலைகள் பெரிதும் கெடவே செய்கின்றன. மற்ற குடும்பங்களாக இருந்தால் இதுவே பெரும் பிரச்சனையாக மாறலாம். இருப்பினும் நம்மை பற்றி எழுதுவதற்கு வேறு யாரும் இல்லை எனும் போது இதை
யாரும் இல்லை எனும் போது இதை செய்தாக வேண்டும் என்ற சமுதாய உணர்வுடனேயே செய்கின்றோம்.
வாங்கிய நூல்களில் நேற்று பார்த்தவரையில் சில செய்திகளை பார்த்துள்ளோம். வரும் நாட்களில் அதை ஒவ்வொன்றாக வெளியிடுவோம். நேற்று கண்டறிந்தவற்றில் ஒன்றிரன்டு செய்திகள் இன்று பதிவு செய்யப்படும்
வாங்கிய நூல்களின் பெயரை ஒவ்வொன்றாக குறிப்பிட நேரமில்லை. அதனால் வாங்கிய நூல்களை மொத்தமாக வைத்து 2 புகைப்படங்கள் எடுத்து பதிவில் இணைத்துள்ளோம்! பாருங்கள்!
புத்தக கண்காட்சி வாங்கிய நூல்களின் பில்லையும் பதிவில் இணைத்துள்ளோம் பாருங்கள்!
அகமுடையார் ஒற்றுமையின் முயற்சிக்கு பணம் அனுப்ப விரும்பினால் கீழ்கண்ட வங்கிகணக்கை பயன்படுத்தவும்
குறிப்பு: நமது வங்கிகணக்கு எனது பெயரான Sakthi Ganesh என்ற பெயரிலேயே இருக்கும் வேறு பெயர்களில் உங்களுக்கு கோரிக்கை வந்தால் அது அகமுடையார் ஒற்றுமையின் கோரிக்கை இல்லை என்பதை புரிந்துகொள்ளவும்! இங்கு குறிப்பிடும் Sakthi Ganesh என்ற பெயரில் உள்ள அக்கவுண்ட் அல்லலாத வேறு அக்கவுண்டிற்கு பணம் அனுப்பிவிட்டு என்னிடம் கேட்டுவிடாதீர்கள்!கவனம்! நன்றி.
AgamudayarOtrumai Bank Account
பெயர்: Sakthi Ganesh
அக்கவுண்ட் நம்பர் : 20871000008199
பேங்க்: HDFC
IFSC Code :HDFC0002087
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்