First
திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோவிலுக்கு மருதுபாண்டியர் திருப்பணியும் அவரது சிலைகளும்-இணையத்தில் முதன் முறையாக
————————————————————————————————-
மதுரை-காரைக்குடி சாலையில் திருப்பத்தூரில் திருத்தளிநாதர் கோவில் அமைந்துள்ளது.சம்பந்தர் அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற பெருமை பெற்றது இத்திருத்தலம்.
இக்கோயிலில் உள்ள பைரவர் சன்னதியின் முன் அமைந்துள்ள மண்டபத்திற்கு அடுத்து அமைந்துள்ள மண்டபம் மருதுபாண்டியர்களால் கட்டப்பட்டது.இதற்குச் சாட்சியாக மருதுபாண்டியர் இருவர் கூப்பிய கரங்களோடு இம்மண்டபத்தில் உள்ள தூண்களில் காட்சியளிக்கிறார்கள்!
மேலும் இக்கோயில் இறைவனுக்கு பதக்கம் ஒன்றையும் செய்தளித்துள்ளார்கள் அப்பதக்கத்தில் “மருது சேர்வை” என்ற பெயர் காணப்படுகிறது!
படங்கள்
முதல் படம்: மருதுபாண்டியர் கட்டிய மண்டபத்தில் காணப்படும் மருதுபாண்டியர் உருவங்கள்
இரண்டாம் படம்: திருத்தளிநாதர் கோவில் முகப்பு(சிமெண்ட் கோபுரம் -சமிபத்தில் கட்டப்பட்டது- கோவிலை அடையாளம் காண மட்டும்)
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்