தமிழ் நாட்டின் அனைத்து அகமுடையார் சமுதாய மக்களின் சார்பாகவும் சமுதாய அமைப்புகளின் சார்பிலும் தமிழக தலைமை அகமுடையார் சங்கம் முன்னெடுப்பில் ஆந்திர மாநிலம் சித்தூரில் சிவகங்கைச் சீமையை ஆட்சி செய்த மாமன்னர் மருது சகோதரர்கள் முழு உருவ வெண்கல சிலை அமைத்தமைக்கு ஆந்திர மாநில முதலியார் சங்கத் தலைவா் திரு. புல்லட் சுரேஷ் அவர்களுக்கு பாராட்டு விழாவும் அகமுடையார் சமுதாய மக்களின் வளர்ச்சிக்காகவும் அகமுடையார் நியூஸ் செயலி (mobile application) அறிமுக விழவும் இன்று 7.2.2026 தஞ்சாவூரில் தொழிலதிபர் TKT முரளி அவர்களின் தலைமையில் மருது பாண்டியர் 7 ம் தலைமுறை வாரிசுதாரர் திரு ராமசாமி சேர்வை திரு.மலைச்சாமி, ஜெயமணி, துர்கா தேவன், வத்தனம் ராஜ், பாலமுருகன் அகமுடையார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக IMPA நிறுவனர் / தலைவர் செவாலியர் டாக்டர் திரு அருணாசலம் முதலியார் மற்றும் தமிழக தலைமை அகமுடையார் சங்க
நிறுவனர் / தலைவர் ஸ்ரீபதி செந்தில்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றியபின் அண்ணன் புல்லட் சுரேஷ் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அதன் நிர்வாகிகள், சமுதாய பற்றாளர்கள் சுமார் 1000 திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர்.
திருவள்ளூர் மாவட்ட அகமுடையார் சங்கம் போர்க்குடி_அகம்படியர் வட தமிழக அகமுடையார் பேரினம் Bullet Suresh திருத்தணி மூ.அக்ரி சதீஷ் Sai Appu





இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
