விழுதுகள் கூடி வேர்களுக்கு எடுக்கும் விழா -நாளை மாலை மதுரையில்
————–
வரலாற்று உண்மையை அடிப்படையாக கொண்டு மாமன்னர்கள் மருதுபாண்டியரின் வாழ்க்கை வரலாற்றை சிவகங்கை சீமை என்ற திரைப்படத்தின் வாயிலாக திரையில் கருப்பு வெள்ளை திரைப்படமாக முதன் முறையாக கொண்டு வந்தவர்
கண்ணதாசன் அவர்கள்.
ஆனால் அதே காலகட்டத்தில் வண்ணப்படமாக வந்த காரணத்தினாலும் ,சிவாஜி போன்ற பிரபல நடிகர் நடித்த காரணத்தாலும், அகமுடையார் இனத்தில் பிறந்த சக்தி கிருஷ்ணசாமி என்ற மிகத்திறமையான திரைக்கதை வசனத்தாலும் ,வரலாற்று உண்மைகளாலும், ஆராய்ச்சி அறிவாலும் உருவான சிவகங்கை திரைப்படம் பெரிதாக போகவில்லை.
ஆனால் அன்று முதல் இன்று வரை நாம் அடிக்கடி பார்த்தும் ,கேட்டும் மகிழும் அந்த சிவகங்கை திரைப்படம் நாட்டுக்கோட்டை செட்டியார் இனத்தை சேர்ந்த கவியரசர் கண்ணதாசன் உருவாக்கி தந்ததாகும்.
அந்த திரைப்படத்திற்காக அவர் செய்த
பெரும் பொருட் செலவிலும் , அவருக்கு ஏற்பட்ட பெரும் எதிர்ப்புகள், தடைகள் எத்தனை ! எத்தனை!
இத்தனையும் மீறி அகமுடையார் பேரினத்தில் பிறந்து நாட்டுக்காக உழைத்து உயிர் துறந்த உத்தமருக்காக திரைப்படம் எடுத்த கண்ணதாசன் அவர்களுக்கு நாம் எதை திருப்பி செய்தோம்???
ஒரு பாராட்டு விழா நடத்தியதாக கூட தெரியவில்லை! செய்திருக்கவும் வாய்பு இல்லை!
ஏன் இந்த அவல நிலை!
பலரிடமும் ,மேடைகளிலும் கூட இதை பலமுறை நான் பேசியுள்ளேன்,எழுதியுள்ளேன்.
அகமுடையார் சமுதாயத்தில் பிறந்து சமுதாயத்திற்காக உழைத்தவர்களை ,அதையும் தாண்டி ,அகமுடையார் சமுதாய தலைவர்களுக்காக உழைத்தவர்களை கெளரவிக்க வேண்டும் என்பது நமது நீண்ட நாள் கனவு!
நம் எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கும் வகையில்
தம்பி மகாமுனி அவர்கள் ,எளிய பின்புலம் உள்ளவர் ஆனால் பெரும் முயற்சியாக தொடக்க புள்ளியாக ஒர் முயற்சி செய்கின்றார்.
ஆம்! விழுதுகள் கூடி வேர்களுக்கு எடுக்கும் விழா என்ற பெயரில் அகமுடையார் சமுதாயத்திற்காக உழைத்த பெரியவர்களுக்கு ,இளையவர்கள் எடுக்கும் பாராட்டு விழா
நாளை மாலை மதுரை பழங்காநத்தத்தில் நடைபெறுகிறது.
வாய்ப்புள்ள அனைத்து உறவுகளும் இந்த விழாவில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்கின்றோம்!
மேலும் விவரங்களுக்கு அழைப்பிதழை பார்க்க வேண்டுகிறோம். நன்றி!
இதைபோல் உலகம் முழுவதும் அகமுடையார் சமுதாயத்தவர்களுக்காக உழைத்தவர்களுக்கு நாம் பாராட்டு விழா நடத்தி விருது வழங்கி கெளரவிக்க வேண்டும்.




இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
