பேராசிரியர் பொன்முடி அவர்களுக்கு பதவி வழங்கவேண்டி -மதுரை திருமங்கலத்தில் போஸ்டர்…

Spread the love

பேராசிரியர் பொன்முடி அவர்களுக்கு பதவி வழங்கவேண்டி -மதுரை திருமங்கலத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டது
———
திமுக கட்சியின் மூத்த உறுப்பினரும் நமது அகமுடையார் சமுதாய உறவுமான
முன்னாள் அமைச்சர் பேராசிரியர் பொன்முடி அவர்களுக்கு பதவி வழங்க வேண்டி மதுரை திருமங்கலத்தின் முக்கிய இடங்களில் கோரிக்கை போஸ்டர் அகமுடையார் ஒற்றுமை சார்பில் ஒட்டப்பட்டது.

திருமங்கலம் பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகம், வட்டாட்சியர் பழைய அலுவலகம் ,எம்எல்ஏ அலுவலகம், முக்கிய பேருந்து நிறுத்தங்கள், தெருக்கள், சந்திப்புகள் ) போன்ற முக்கிய இடங்களில் அதிகமான போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இன்னும் பல தெருக்களின் உள்ளேயும் ஒட்டப்பட்டது (அவற்றின் புகைப்படங்களை எடுக்கவோ குறிப்பிடவோ முடியவில்லை)
குறிப்பு-
இதே போல் விழுப்புரம், திருவண்ணாமலை ,சென்னை போன்ற பல பகுதிகளிலும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கிய குறிப்பு- அண்ணன் பொன்முடி அவர்கள் எல்லா சமுதாயத்திற்கும் ஆதரவாக நின்று மக்கள் பணி செய்தை போல் தான் பிறந்த அகமுடையார் சமுதாயத்திற்கும் நிறைய பணிகளை செய்துள்ளார் ஆனால் அவற்றையெல்லாம் பொதுவெளியில் குறிப்பிட்டு அவரை நாம் சாதி அடையாளத்திற்குள் சிக்க வைத்து சங்கடத்தில் ஆழ்த்தக்கூடாது.

அகமுடையார்கள் அரசியல் விழிப்புனர்வு அறவே இல்லாமையால் அகமுடையார் பெரும்பான்மை தொகுதிகளை பல இடங்களில் இழந்து விட்ட இந்த சூழ்நிலையில் நம் சமுதாயத்தில் பிறந்த ஒரு சில அரசியல் பிரமுகர்களையும் நாம் அரசியலில் இழந்துவிடக்கூடாது . ஒருவேளை இழந்து அந்த தொகுதியோ, வாய்ப்போ வேறு ஒருவருக்கு சென்றுவிட்டால் அதை நாம் மீட்க முடியுமா? அப்படிப்பட்ட எழச்சியான அரசியல் நிலையிலா நாம் இருக்கிறோம்? இல்லை மாற்றாரிடம் தான் நாம் சென்று கேட்க முடியுமா? நம் தொகுதியில் நம்முடைய வாய்ப்பை மாற்றி பெற்று வந்தவர்கள் , நம்மை வளரவிடுவார்களா?

என்பதை சற்றே சிந்தித்து பார்த்து விமர்சனங்களை செய்ய வேண்டும்!

நமக்கான வாய்ப்பு, பாதை இருந்தால் தான் நாளை நம் வருங்கால சந்ததிகள் அந்த வாய்ப்பை அல்லது பாதையை பயன்படுத்த முடியும் என்பதை உணருங்கள்!
உண்மையை உணர்ந்து, நாம் ஒற்றுமையோடு ஆதரவளிக்கும் போது தான் இந்த இனமும், வருங்கால சந்திதிகளின் வாழ்வும் பாதுகாக்கப்படும்! இது சத்தியமான உண்மை!

இனிமேலேனும் நாம் உணர்ந்து நம்மவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்! அகமுடையார்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒருமித்து பயணிக்க வேண்டும்.

படங்கள் இணைப்பு

1-திருமங்கலம் நகராட்சி பழைய அலுவலகம் (முன்பகுதி )
2-திருமங்கலம் வட்டாசியர் அலுவலகம்
3-திருமங்கலம் பேருந்து நிலையம்
4-திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் (எம்எல் ஏ) அலுவலகம்,மீனாட்சி அம்மன் கோவில்
5- ஆனந்தா தியேட்டர் பேருந்து நிறுத்தம்(விருதுநகர் சாலை)
6-சந்தைப்பேட்டை பேருந்து நிறுத்தம்(உசிலை சாலை)
7-நகராட்சி புதிய அலுவகம் (பின்பகுதி)
8- மறாங்குளம் பேருந்து நிறுத்தம் (மதுரை சாலை)
9- ராஜாஜி சிலை மற்றும் பெரியார் சிலை அருகில்(மதுரை சாலை)
10-பத்திர பதிவு அலுவலகம்
11-பிகேஎன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி( மதுரை சாலை)






இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo