First

அகமுடையார் சாதி திமிரை அடக்கி விடுவேன் என்று பேசிய டி.ஜி. கணேசை கண்டிக்கிறோம். காவல்துறை நடவடிக்கை தேவை
============
டி.என். முருகன் எனும் நமது அகமுடையார் சமுதாயத்தை சேர்ந்தவர் ,விழுப்புரம் அருகே உள்ள திருக்கோவிலூர் நகரின் நகராட்சித் தலைவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் திருக்கோவிலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் இடத்தை மாற்றக் கோரி,கடந்த செப்டம்பர் 12 அன்று அனைத்துக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்ற
டி.ஜி. கணேஷ் என்பவர் திருக்கோவிலூர் நகராட்சித் தலைவர் டி.என். முருகன் கண்டிக்கிறேன் என்கிற பெயரில் டி.என். முருகன் அவரின் சாதி திமிரை அடக்கி காட்டுகிறேன் என்று பேசியுள்ளார். திருக்கோவிலூர் நகராட்சித் தலைவர் டி.என். முருகன் சார்ந்த நமது அகமுடையார் சாதி திமிரையே அடக்கி காட்டுகிறேன் என்கிற தொனியில் பேசியுள்ளார்.
ஆர்பாட்டத்திற்கு வந்தால் கோரிக்கையை மட்டுமே பேச வேண்டும்! அதைவிடுத்து சாதி பிரச்சனையை உருவாக்கும் வகையில் சம்பந்தமில்லாமல் அகமுடையார் சாதி திமிரை அடக்கி விடுவேன் என்று பேசியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
உலகம் முழுவதும் பரவி வாழ்ந்தும் தமிழ்நாட்டின் ஆகப்பெரும்பான்மை சாதியாக உள்ள
அகமுடையார் சாதியை அடக்கிவிட உன்னால் முடியுமா?
அகமுடையார் ஒற்றுமை தளத்தின் சார்பாக இந்த சாதி வெறிப் பேச்சை கண்டிக்கின்றோம்!
இது போன்று சாதி வெறியை தூண்டி அமைதியாக இருந்து வரும் தமிழகத்தில் பொது அமைதியை கெடுக்கும் வகையில் பேசியுள்ள டி.ஜி. கணேஷ் என்பவர் மீது காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
