First
வரலாற்றில் இன்று !
***********************
தேவர் பட்டம் உபயோகிக்கும் சாதிகளை இணைத்து முக்குலத்தோர் என்று அழைக்ககூடாது !
தேவர் என்ற பட்டப் பெயரை சாதிப்பெயர் ஆக்க கூடாது !
என 5/11/1945 ல் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் மதுரையில் கூடிய அகில இந்திய #அகம்படியர் சங்கம் தீர்மானம் இயற்றியது !
அதன் நகலை அரசாங்கத்திற்கு அனுப்பவும்,இத்தீர்மானத்திற்கு ஆதரவாக நாடெங்கும் உள்ள அகம்படிய பேரினத்தின் கையெழுத்தை பெறுவதென்றும் சங்கம் தீர்மானிக்கிறது !
அதன்படி களத்தில் இறங்கிய சங்க காரியதரிசி #கீழராங்கியம்
திரு #ஐயாகுட்டித்தேவர் அவர்கள் கிராமம் கிராமமாக கையெழுத்து வேட்டை நடத்துகிறார் !
அவ்வாறு கையெழுத்து பெறுவதற்காக 77 வருடங்களுக்கு முன் இதே நாளில் 9/11/1945 கல்லுமடை பூலாங்குளம் (இன்று விருதுநகர் மாவட்டம்)வருகிறார்,
உறவுகள் ஒருவர் தவறாமல் கையெழுத்திடுகின்றனர் !
அங்ஙனம் கையெழுத்திட்டதில் என் பூட்டன் (என் அம்மாயி இராக்கம்மாள் அவர்களின் தாய் மீனாட்சி அம்மாளின் தந்தை)
திரு கருப்பணத்தேவர்
(படத்தில் அமர்ந்திருப்பவர்) கையெழுத்திட்ட நாள் இன்று !
அவர் பேரன் நான் இன்று தனிப்பேரின அரசியல் பேசுவதில் ஆச்சர்யம் என்ன இருக்கிறது ?
ஆவண உதவி
அகமுடையார் அரண்
Balamurugan Agamudayar
மேற்படி சங்கத்தின் தீர்மானங்கள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு கீழ்காணும் லிங்க்கை அழுத்துங்கள் !
https://m.facebook.com/groups/1768691009829236/permalink/2587429137955415/
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்