அமைகிறது மாமன்னர்கள் மருதிருவர் நூலகம். ( போட்டித் தேர்வு க்காக மட்டும்) நாள் ஞ…

Spread the love

First
அமைகிறது மாமன்னர்கள் மருதிருவர் நூலகம். ( போட்டித் தேர்வு க்காக மட்டும்) நாள் ஞாயிற்றுக்கிழமை(14-02-2021) அன்று காலை 10 மணி
——————————————————–
மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள 32 ஊர் மேலமண்டு அகமுடையார்களுக்கு சொந்தமான மடத்தில் அகமுடையார் மாணவ மாணவியருக்கு அரசு போட்டி தேர்வு பயிற்சி வகுப்புகள் நடந்து வருவது நீங்கள் அறிந்ததே.

தற்போது நமது சமூக மாணவர்கள் பயன்பெறுமாறு சுமார் 2000 புத்தகங்கள் அடங்கிய போட்டித் தேர்வு நூலகம் திறப்பு விழா வரும் ஞாயிற்றுக்கிழமை(14-02-2021) அன்று காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது .

நூலகத்தை ரேடியன் பயிற்சி மைய நிறுவனர் திரு. ராஜபூபதி அவர்கள் திறந்து வைத்து மாணவர்களுக்கு தொடர்ந்து வழிகாட்ட உள்ளார்கள் நிகழ்வில் சமுதாய பெரியார்களும் ,ஆர்வலர்களும் கலந்து கொள்கிறோர்கள் இந்த நிகழ்வில் வாய்ப்பிருக்கும் அகமுடையார் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு நல்ல முறையில் வழிகாட்டுமாறு அன்புடன் வேண்டுகிறோம்…

மாமன்னர் மருதிருவர் நூலகம்…
அகமுடையார் கல்வி மையம்…
திருப்பரங்குன்றம்..
அன்புடன்..
M. Marutha muthu BSc ( chem), (MSc (Geo) , BA ( Tamil)
தொடர்புக்கு:
7010493288,9659261272,
9786836503,7200015086

குறிப்பு:
ஆக்கபூர்வமான இந்த கல்விப்பணிக்கு ஒவ்வொருவரும் அவரவர் இயன்றவகையில் உதவிட வேண்டுகிறோம். பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள தொடர்பு எண்ணில் தொடர்பு கொண்டு பேசினால் என்ன உதவி தேவை என்பதை கேட்டு அதில் உங்களால் முடிந்ததை உதவிட முடியும். மாற்றத்தை விரும்பினால் நாம் முதலில் மாற தயாராக வேண்டும்.

துளுவ வேளாளர் என்போர் அகமுடையாரின் உட்பிரிவே என்பதற்கான சான்றுகளை கட்டுரை அல்லது மின் நூல் வெளியிடுவதே நம் அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தின் அடுத்த பதிவாக இருக்க முயற்சி செய்கின்றோம் என்று கமேண்ட் ஒன்றில் நாம் தெரிவித்திருந்ததாலும் , இக்கட்டுரைக்கான பல்வேறு புதிய ஆதாரங்களை திரட்டி கொண்டிருந்ததால் பதிவுகள் ஏதும் வெளியிடவில்லை. ஆனால் இதே கருத்தை மையப்படுத்தி சில விசயங்களை சொல்ல வேண்டியிருப்பதால் ஒரிரு கல்வெட்டு செய்திகள் நாளை அல்லது வரும் நாட்களில் வெளிவரும். காத்திருங்கள்!



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

19 Comments
  1. வாழ்த்துக்கள்

  2. வாழ்த்துக்கள்

  3. 33 ஊர்களை பதிவு செய்யுங்கள்

  4. உங்கள் சமூக சமூதாய பணிக்கு என்னுடைய நன்றிகள் தங்ளின் பணி மேலும் சிறக்க என் வாழ்த்துக் கள் .இன உணர்வாளர்களே நம் இன குலத் தொழில் ஊத்திக் கொடுப்பதும் மேலும் பல மட்டமான வார்த்தைகளை பயன்படுதி ய அமைச்சரை கண்டிக்கவும் மீண்டும் நம் சமுதாயத்தை யாரும் தொட அஞ்சும் படி செய்ய வேண்டும். ஆண்ட பறம்பறை ஆண்ட பறம் பறை என் கிறோம் இன்று ஒருவன் சொல்கிறா ன் ஊத் திக் கொடுத்த பரம் பளற குடும்பத்தை கெடுக்கும் பரம் பறை என்று உங்கள் பதிலடி என்ன

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?