திருஞான சம்பந்த சுவாமிகள் குருபூஜை- மருதுபாண்டியர் வழங்கிய வெள்ளித்தேரில் உலா-நிகழ்விற்கு வரவேற்கின்றோம்

Spread the love

மதுரை ஆதீனத்தை சமயக்குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்த சுவாமிகள் மதுரையில் உருவாக்கினார் என்பது நம்மில் பலர் அறிந்த வரலாறு .

தேவாரம் பாடியவரும் மதுரை ஆதின கர்த்தருமாகிய திருஞானசம்பந்த சுவாமிகளின் உற்சவ மூர்த்தி திருவீதி உலா செய்ய வெள்ளித்தேர் ஒன்று மாமன்னர்கள் மருதுபாண்டியர்களால் வழங்கப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் திருஞான சம்பந்த பெருமாளின் குருபூஜை நாளான வைகாசி மூலநட்சத்திர நாளில் திருஞானசம்பந்தர் உற்சவ மூர்த்தியாக மருதுபாண்டியர் அளித்த வெள்ளித்தேரில் கோவிலில் இருந்து புறப்பட்டு, ஆவணி மூல வீதிகள் வழியாக மதுரை ஆதின முகப்பிற்கு வந்து திருக்கண் சாத்தப்படும் நிகழ்வு பாரம்பரியமாக நடதப்படுகின்றது.

இந்த வருடத்தின் இச்சிறப்புகு நிகழ்வு இன்று (05-06-2023 ) மாலை நடைபெறவிருக்கின்றது .ஆகவே இத்தகைய சிறப்புமிக்க நிகழ்விற்கு அனைத்து அகமுடையார் உறவுகளையும், அனைத்து சமுதாய ஆன்மீக அன்பர்களையும் வரவேற்கின்றோம்!

வெள்ளித்தேரானது இன்று மாலை மதுரை அம்மன் சன்னதியில் இருந்து புறப்படுகின்றது.

நேரம்: மாலை 6 மணி
சந்திப்பு இடம்: அம்மன் சன்னதி,மதுரை

நிகழ்வில் சந்திப்போம்!

நிகழ்விற்கு வருபவர்கள் நிகழ்வு நேரத்திற்கு சற்று முன்னதாக மாலை 5.45 மணி என்ற அளவில் வந்தால் சரியாக இருக்கும்.

 

தொடர்புக்கு :
94429 38890, 98421 43888, 7010493288

 

 

 

இந்நிகழ்வையொட்டி சேர்வைக்காரர் மண்டகப்படி திருப்பணிக்குழு சார்பில் இன்று (05-06-2023) காலையில் மதுரை ஆதின மடத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிப்பதை படத்தில் காணலாம்.

நிகழ்வையொட்டி மதுரை நகரில் விளம்பர சுவரொட்டிகள் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டிருந்தன.

பதிவு: அகமுடையார் ஒற்றுமை

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo