First
திருப்பத்தூர் திருத்தளிநாதர் அகமுடையார் மண்டகப்படி
———————————————–
இன்றைய சிவகங்கை மாவட்டம் ,திருப்பத்தூரில் மதுரை-காரைக்குடி அல்லது மதுரை-புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ளது திருத்தளிநாதர் கோவில் ஆகும்.
இக்கோவில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற சிறப்புடையது.
இத்திருக்கோவிலில் வைகாசி விசாக விழா பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த வருடத்தின் திருவிழா மே 24ல் துவங்கியது.
நான்காம் நாள் திருவிழாவில் அகமுடையார் மண்டகப்படியில் சுவாமி எழுந்தருளினார்.
குறிப்பிட்ட இத்திருத்தளிநாதர் கோவில் மருதுபாண்டிய மன்னர்களின் கொடையால் சிறப்படைந்தது.
இக்கோவிலின் பைரவர் சன்னதியின் முன் மண்டபத்தை அடுத்துள்ள மண்டபம் மருதுபாண்டியர்களால் கட்டப்பட்டது.இதற்கு சாட்சியாக மருதுபாண்டியர்கள் இருவரின் சிலை இம்மண்டபத்தூண்களில் காணப்படுகின்றது.
மேலும் ஆதாரம்: Tamil Nadu District Gazetteers Ramanathapuram Ramaswami ,பக்கம் எண் 981
அதுமட்டுமல்ல கோவில் இறைவனின் மார்பில் மருதுசேர்வை என்ற பதக்கமும் காணப்படுகின்றது.
ஆதாரம்: மருதிருவர் (நூல்) , பக்கம் எண் 73,ஆசிரியர்: டாக்டர்.ந.சஞ்சீவி
குறிப்பு:
திருத்தளிநாதர் கோவிலில் அகமுடையார் மண்டகப்படி இருப்பதே நமக்கு இன்று தினமலர் செய்தியை பார்த்த பின்பு தான் தெரிந்தது. அந்த அளவிற்கு தான் நாம் விழிப்புனர்வோடு இருக்கிறோம்.
பல்வேறு கோவில்களில் மண்டகப்படி ,திருவிழாக்கள் இருந்தும் அந்த தகவல்களை பொதுவெளியில் வெளியிடாததினால் தான் குறிப்பிட்ட ஊர் தாண்டி மற்ற ஊர் அகமுடையார்களுக்கும் இது தெரிவதில்லை மற்ற சமுதாய மக்களுக்கும் தெரிவதில்லை. இப்படியே வெளிப்படுத்தாமலே இருப்பது பிறகு பிரச்சனை என்றால் முழிப்பது இப்படி சமுதாயம் தொடர்ந்து செல்கிறது.
இனியாவது வரலாற்றை வெளிப்படுத்துவோம். திருத்தளிநாதர் அகமுடையார் மண்டகப்படி புகைப்படம் ,வீடியோ இருப்பவர்கள் 920050 7629 என்ற அகமுடையார் ஓற்றுமை வாட்ஸ் அப் நம்பருக்கு அனுப்பலாம். நன்றி!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்