First
சிவனின் காக்கும் அம்சமாக பிறந்தவர் தான் நந்தி தேவர்
—————————————-
செய்தி: தினதந்தி வெள்ளிமலர் (10-02-2023)
நாளிதழ் பட உதவி: அண்ணன் அவர்கள் (பெயர் குறிப்பிடவிரும்பாததால் இங்கு குறிப்பிடவில்லை).
இப்பதிவிற்கு சகோதர் ஒருவர் கமேண்ட் செய்திருந்தார்.அவருடைய கேள்வியும் நமது பதிலும்:
மகேஸ்வரன் தேவர்: அற்புதம் மீனாட்சியும் வானவ அகம்படிய குல தேவி என்று குறிப்பிடப்படுகின்றார்
அகமுடையார் ஒற்றுமை:
ஆம் இதை பொருத்தி பார்ப்பீர்கள் என்று தெரியும்! ஆனால் இறைவர்களை சாதியோடு முழுமையாக தொடர்புபடுத்துவதில் சிக்கல்களும் உள்ளன. பார்வதி தேவி ஒர் இடத்தில் தஷ்சன் மகளாகவும் இன்னொரு இடத்தில் மீன் பிடிக்கும் பரதவர் குலத்தவராகவும் காட்டப்பட்டிருப்பார்.
இதை போல் சிவனை மற்றவர்களும் தங்கள் இனத்தவர் என்று சொந்தம் கொண்டாடுவார்கள். இது தான் புராணத்தில் உள்ள சிக்கல்.
ஆனால் நாம் சொந்தம் கொண்டாடுவது புராணங்கள் ஊடாக இருக்கும் உண்மையின் வழியே மட்டுமே! நந்தி தேவர் அகம்படி எனும் காவல் தொழிலை செய்தர் என்பதோடு அவர் வெறுமனே காவல் செய்தவரல்லர் அவர் இறைவனின் அம்சம் என்று நிறுவதற்காகவுமே . எனென்றால் சிலர் காவலரை ஏவலாள் என்ற அர்தத்தோடு பேசுவது தவறு அரசனே காவலானாகவே இலக்கியங்களில் காட்டப்பட்டுள்ளான் ,இறைவனும் அப்படித்தான்.
சோழர்களுடன் திருமண உறவு கொண்ட தாக சங்க இலக்கியத்தில் கூறப்படுவர்கள் வாணர்கள்
மாவலி மருமான் சீர்கெழு திருமகள் சீர்த்தி யென்னுந் திருத்தகு தேவியொடு – மணிமேகலை 19/54 ( மாவலியின் மருமகனே சோழ அரசன்)
பிற்கால இலக்கியங்களில் தங்களை பரமேஸ்வரின் வாயிற்காவலவரின் வழிவந்தவர் என்று கூறிக்கொண்டதும் இதற்கு ஓர் நல்ல உதாரணம் . சங்க காலத்திற்கு முன்பே பெரும் அரசமரபாக கூறப்படும் அகம்படியர் சாதியின் வாணர் குலமே தங்களை பிற்காலத்தில் வாயிற்காவலர் என்று சுருங்கி நின்றனர்.
காரணம் சேர நாட்டை சேரர்களுக்கு முன்பே ஆண்ட பழம்பெரும் வம்சத்தவர்கள் வாணர்கள் எனும் பழம் குடியினர் ,இவர்கள் சேர,சோழ,பாண்டிய,துளு போன்ற பகுதிகளை ஆண்ட பெரும் சக்கரவர்த்திகள் ,பேரரசர் மரபினர் ஆவர். இந்த வாணர் குடியில் தோன்றியவன் தான் இன்றும் கேரளாவில் கொண்டாடப்படும் மாவலி சக்கரவர்த்தி .
சேரர்கள் மற்றும் அவரது உறவினர்களான பாண்டியர்கள் ஆகிய இருவர்களுடனும் வாணர்கள் மோதி வலிமை குன்றி ஆட்சியை இழந்தனர்.
அதன் பின் வாணர் மரபினர் பல்வேறு இடங்களுக்கும் சென்று ஆட்சி செழுத்த முற்பட்டனர் . வடுகர் தேசத்திற்கு செல்லும் வழி ,சேலம் ஆறகளூர், ஆற்காடு போன்ற பகுதியில் ஆட்சி செழுத்தியதோடு, தங்கள் உறவினர்களான சோழர்களிடமும் படைத்தலைவர்களாக ,அதிகாரிகளாக பணியாற்றினர்.
இப்படி இவர்கள் அரசகுடி மரபிலிருந்து மற்ற அரசர்களுக்கு படைத்தலைவர்களாகவும் அதிகாரிகளாகவும் மாறியதை பின்பற்றியே அகம்படிய மரபினரான வாணர்களையும் , அகம்படிய சாதியினரையும் புராணத்தில் அதிகாரி, மெய்காவல் போன்று உருவகப்படுத்தும் மரபு தோன்றியது. இருப்பினும் இதை பல்வேறு ஆதாரங்களுடன் பின்னாளில் விளக்குவோம்.
குறிப்பு:
உங்களுக்கு தெரிந்த அகமுடையார் சம்பந்தமான தகவல்களை நமது ஆய்வுக்கு அனுப்ப அகமுடையார் ஒற்றுமை வாட்ஸ் அப் எண் 7200507629
அகமுடையார் ஒற்றுமை அப்ளிகேசனை டவுன்லோட் செய்யாதவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்துகொள்ளுங்கள் .
https://play.google.com/store/apps/details?id=com.agamudayarotrumai.community
லிங்க் ஒர்க் ஆகவில்லை என்றால் உங்கள் மொபலில் கூகிள் பிளே ஸ்டோர் சென்று என்று ஆங்கிலத்தில் இடைவெளி இல்லாமல் டைப் செய்து அப்ளிகேசனை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்!
நமது அப்ளிகேசன் பற்றிய தகவல்களை உங்களுக்கு தெரிந்த பேஸ்புக்,வாட்ஸ்அப் ,டெலிகிராம் குருப்களில் மறக்காமல் பகிர்ந்துகொள்ளுங்கள்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்