சில மாதங்கள் முன்பு வெளியாகி வெற்றிபெற்று இன்று வரை பரபரப்பாக சோசியல் மீடியாவிலும் பேசப்படும் குறிப்பிட்ட திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதி இயக்கி இருப்பவர் அகமுடையார் சமுதாயத்தவர்.
திரைப்படத்தை இயக்குநர் சிறந்த முறையில் எடுத்துள்ளார் மிக நேர்த்தியாக கதை வசனம் எழுதி சாதித்துள்ளார் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.
ஆனால் பொது வெளியில் சொல்ல முடியாத வெட்கக்கேடான விசயங்களை செய்து பணத்தை ஈட்டி உயர்ந்தை கதையில் மறைத்து மாற்றி உலக உத்தமர் போல் பெருமையாக காட்டுவது நல்லதாக இல்லை. ஒருவன் தவறான வகையில் பணம் சம்பாதித்து இருந்தாலும் அவன் பொருளாதாரத்திலும் அதிகாரத்திலும் இருந்தால் அவனை போற்றி புகழுவதும் ஆதரிப்பதும் இன்று இயல்பு போல் மாறிவிட்டது.
இந்த திரைப்படத்தில் செயற்கையாக செய்யப்படும் போலித்தனங்களில் அவர்களின் செய்கைகளை நியாயமாக நினைத்து விடுகிறோம்.
பணம் சம்பாதிப்பது பெரிதல்ல. அதில் நேர்மையும், ஒழுக்கமும், மற்றவர்களை பாதிக்கா வண்ணமும் பணம் சம்பாதிக்க வேண்டும்! மற்றவர்களின் வயிற்றெரிச்சலில் சம்பாதித்து செல்வம் சேர்ப்பது எல்லாம் என்ன பெருமையா???அப்படி பணம் சேர்த்தவரை கதை
அதை பாராட்டுவது எல்லாம் என்ன மாதிரியான மனநிலை!
நமது பாட்டிகள் எப்படிப்பட்ட அறம் சார்ந்த நேர்மையான வாழ்க்கையை விட்டு சென்றுருக்கிறார்கள். அதை இவர்கள் படம் எடுக்க துணிந்ததுண்டா?
இப்படி அகமுடையார் சமுதாயத்தில் பிறந்து தான் பிறந்த சமுதாயத்தின் வாழ்க்கை நிகழ்வுகளை எதுவும் பதிவு செய்யாமல் சென்றவர்கள் நிறைய பேர்.
நாங்கள் சாதிப் படம் எடுக்க சொல்லவில்லை. ஆனால் இந்த சமுதாயத்தின் நேர்மையான வாழ்க்கையை தமிழரின் பொது அறமாக படம் எடுக்க கூட ஆள் இல்லை என்பதுவே வருத்தத்திற்குரிய உண்மை!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
