22 ஆகஸ்ட் -இன்று சென்னை தினம்- சென்னை உள்ளிட்ட தொண்டை மண்டல பகுதியை கி.மு காலத்தில் இருந்து ஆட்சி செய்த அகமுடையார்கள்
———————–
இன்று சென்னை தினம்.சென்னை என்ற நகரம் உருவாகி இந்த வருடத்தோடு 385வது வருடம் கொண்டாடப்படுகிறது.
சரி கொஞ்சம் பொறுங்கள்! சென்னை நகரம் உருவாகி 385 ஆண்டுகள் தான் ஆகின்றன ஆனால் கி.மு காலத்தில் இருந்தே அகமுடையார்கள் ஆட்சி செய்தாக கூறுகிறீர்களே என்கிறீர்களா?
சென்னை என்பது நகரமாக உருவாக்கப்பட்டது பிரிட்டிஷ்ஷார் காலத்தில் தான். ஆம் சென்னை என்ற நகரம் ஏற்கனவே இருந்த மயிலாப்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல பழமையான கிராமங்களை இணைத்து உருவான நகரம் ஆகும். இப்படி பல்வேறு கிராமங்களை இணைத்து சென்னையை பெரு நகரமாக உருவாக்கியது பிரிட்டிஷார் . அந்த அடிப்படையில் தான் சென்னை உருவானதன் 385வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. என்றாலும் சென்னை அடங்கிய தொண்டை மண்டலம் என்ற பகுதி என்பது அதற்கும் ஆயிரம் வருடங்கள் பழமையாக இருந்த பகுதியாகும்.
சரி விசயத்திற்கு வருவோம்.
சென்னை உள்ளிட்ட தொண்டை மண்டல பகுதிகள் அகமுடையார்களால் கி.மு(கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர்) ஆளப்பட்டது என்று சொன்னோம் அல்லவா?அவற்றை வரிசையாக பார்ப்போம்.
22, ஆகஸ்ட் 1639
சோபட்டினம் என்பது இன்றைய மரக்காணம் தொடங்கி இன்றைய சென்னையின் கிழக்கு கடற்கரை சாலை ,படுவூர் அடையாறு பகுதி வரை நீண்டிருந்தது. இப்பகுதியை ஆட்சி செய்தவர்கள் வாணர் வழிவந்த அகமுடையார்கள் ஆவர்.
கி.பி 2ம் நூற்றாண்டில் பெரிப்ளூஸ் எனும் கிரேக்க நூலில் சோப்ட்மா என்று அழைக்கப்பட்ட சோபட்டினம்(சோ-கோட்டை,பட்டினம்-நகரம் ) நகரை குறிக்கின்றது. குறிப்பிட்ட இந்த சோபட்டினம் கி.மு காலத்திய சங்க கால பாடல்களிலும் குறிக்கப்பட்டுள்ளது என்பதால் சென்னை உள்ளிட்ட தொண்டை மண்டல பகுதிகள் அகமுடையார்களால் 2000 வருடங்களுக்கு மேலாக ஆளப்பட்டது என்பதை அறிந்து கொள்ளலாம்.
கி.பி 8ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் செய்தியில்
“படுவூர்க் கோட்டத்து அடையறு நாடு விசையாதித்த
இளகம்படிகள் ” என்ற வரிகள் மூலம் படுவூர் கோட்டம் பகுதியை சேர்ந்த அடையாறு பகுதியை அகம்படியர் இனத்தை சேர்ந்த( இன்றைய அகமுடையார் சாதியை சேர்ந்த) பாணர் அரசரான விசையாதித்தன் என்பவன் ஆட்சி செய்தது தெரிய வருகின்றது.
இந்நடுகல் செய்தியை படிக்க லிங்க்
https://www.facebook.com/100063919813164/posts/721131733360814
அதன் பின்னர் சோழர் காலத்தில்
திருநின்ற மலை -ஈழப்படை வென்றான் என்பவன் திருநின்றமலை பகுதி இறைவனுக்கு கொடை ஒன்றை அளித்துள்ளான். பார்க்க இணைப்பு) இவனின் அரசன் சோழ கங்க தேவனும் அகமுடையார் இனத்தவன் என்பதை தஞ்சாவூரில் கிடைத்த அத்திபற்று கல்வெட்டு எடுத்துக்காட்டுகின்றது(பார்க்க இணைப்பு)
இந்த சோழ கங்க தேவன் சோழரின் சார்பாக கங்க பகுதிகளை ஆட்சி செய்தவன் என்பதை இவன் பெயரே உணர்த்தும் (தொண்டை நாட்டு பகுதிகளை ஆட்சிக்குட்படுத்திய கங்கர்களின் பகுதிகளை சோழர்களின் பிரநிதியாக ஆட்சி செய்தவன் ) என்றாலும் இவனை தொண்டை மண்டலத்து பையூர் நாட்டின் இளவரசன் என்று சோழர் என்ற நூலில் ( சோழர் நூல் தமிழ் மொழியாக்கம் பாகம் 2 ,பக்கம் எண் 751 ல் குறிப்பிடுகிறார்)
என்பதாலும் மேற்குறிப்பிட்ட கல்வெட்டு கிடைத்த சென்னை திருநின்றமலை ( திருநீர்மலை) பகுதி அடங்கிய தொண்டை மண்டல பகுதி அகமுடையார்களால் ஆளப்பட்டது என்பதை அறிந்து கொள்ளலாம்.
“குத்தன்பாக்கத்தில் அகம்படியாரில் திருக்காளத்தி உடையானான நரசிங்க பன்மன் கொண்டுடைய வடக்குபட்டுக்கு” என்ற கல்வெட்டு செய்தி மூலம் இன்றைய பள்ளிக்கரனை உள்ளிட்ட ஈசீஆர் பகுதிகள் நந்திபன்மன் எனும் அகம்படியாருக்கு சொந்தமானது என்பதை அறியலாம். இவன் திருக்காளத்தி பகுதியிலும் ஆட்சிக்குடையவனாக இருந்திருக்கலாம்.
வாண அரசர்கள் சென்னையின் படுவூர் பகுதியை ஆட்சி செய்ததாக குறிப்பிடும் கி.பி 8ம் நூற்றாண்டு வரையான கல்வெட்டுக்களை மேலே பார்த்தோம் அல்லவா
குறிப்பிட்ட இந்த படுவூர் பகுதியை
கி.பி 15ம் நூற்றாண்டு வரை அகம்படியார்கள்(இன்றைய அகமுடையார்கள்) ஆட்சி செய்துள்ளனர் என்பதை மற்றோரு கல்வெட்டு எடுத்துக்காட்டுகின்றது.
விஜய நகர ஆட்சி பிரதிநிதியான
சாயண்ண உடையார் காலத்திலும் படுவூர் பகுதியான ஆட்சியாளர்களாக அகம்படியர்களே இருந்துள்ளனர் என்பதை கி.பி 15ம் நூற்றாண்டு எடுத்துக்காட்டுகிறது.
இந்த கல்வெட்டு செய்தியில்
“படுவூர் நாடாழ்வார் அகம்படியாரில் காலிங்கராயனும், சேதிராயனும் ஆதித்தன் ” உள்ளிட்ட படுவூர் தலைவர்களான அகம்படியார்கள் அந்த பகுதியில் நிர்வாகத்தை சரிவர பேணாததால் அப்பகுதியில் கொலை ,கொள்ளை போன்ற சம்பவங்கள் நடைபெற்றதாகவும் அதனால் விஜயநகர அரசபிரதிநிதியான சாயண்ண உடையார் அகம்படியர்களிடமிருந்த படுவூர் தலைவர்களுக்கு தண்டனை (படுவூர் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கினார்) என்பதும் தெரிகிறது. (பார்க்க இணைப்பு )
இக்கல்வெட்டை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள் நெடுங்காலமாக (கல்வெட்டிலேயேயும் இந்த குறிப்பு உள்ளது) படுவூர் பகுதியை நிர்வகித்த அகம்படியர்கள் தங்கள் பணியை சரிவர செய்யததன் காரணம் புதிதாக வந்த விஜயநகர ஆட்சியாளர்களை பூர்விக அகமுடையார்கள் ஏற்றுக்கொள்ளாதே என்று குறிப்பிட்டுள்ளனர் (ஆம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஆட்சி செய்த பகுதியில் புதிதாக வந்தவர்களின் மேலாண்மையை ஏற்றுக்கொள்ள மனம் வருமா என்ன? )
இக்கல்வெட்டில் குறிப்பிடும் அகம்படியர்கள் வாணர் மற்றும் சோழர் வழியினர் என்பதை காலிங்கராயர்,சேதிராயர் போன்ற வாணர்களின் பட்டங்களும், ஆதித்தன் என்ற பட்டமும் விளக்கும்.மேலும் வாணர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்த படுவூர் பகுதியை 15ம் நூற்றாண்டு வரை அகமுடையார்கள் தங்கள் வசம் தக்க வைத்திருந்தனர் என்பதை உணர்த்தும் சான்றாக இது விளங்குகிறது.
இன்று சிலர் கதைவிடுவது போல் ஆட்சியாளர்கள் மாறினாலும் ஆளுகின்ற வர்க்கத்தினர் அடிமையாக மாறி விடுவதில்லை. ஆட்சியில் நேரடியாக இயங்க முடியாவிட்டாலும் தொடர்ந்து செல்வாக்கு படைத்தவர்களாகவே திகழ்வார்கள் .
15ம் நூற்றாண்டுக்கு பின்னால் அரசர்கள் என்ற நிலைமாறி அகமுடையார்கள் நில உடமையாளர்கள் ,செல்வந்தர்கள் என்ற நிலையிலும் தொடர்ந்து தங்களது ஆளுமையை சென்னை மற்றும் தொண்டை மண்டல பகுதியில் செழுத்தி வந்துள்ளார்கள் .
இன்றைய சென்னை மற்றும் தொண்டை மண்டலத்தை சுற்றி அமைந்துள்ள பல ஊர்களும், தெருக்களும் அகமுடையார்களின் பெயர்களையும் அடையாளங்களை தாங்கி நிற்கின்றன. சென்னை நகரத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட இடங்களை திருவிக பட்டியலிடுகிறார்.
கி.பி 16,17,18ம் நூற்றாண்டுகளில் அகமுடையார்கள் பெரும் ஆளுமையாக விளங்கியதோடு வலங்கை பிரிவின் தலைவர்களாக விளங்கி சென்னை நகரில் நடந்த வலங்கை ,இடங்கை பிரிவு மோதல் நடந்த சமயத்தில் அகம்படியார்கள்( அகமுடையார்கள்) இடங்கையினரின் புகார்களை ஆங்கில அரசிடம் சேராமல் பார்த்து கொண்டார்கள்.
குறிப்பு:
சென்னையில் அகமுடையார்களின் ஆளுமை குறித்து மட்டும் பெரும் நூலே வெளியிட வேண்டி உள்ளது.அவ்வளவு விசயங்கள் உள்ளன.
அதேபோல் அகமுடையார்கள் சென்னையை ஆட்சி செய்தது குறித்து அது குறித்தும் இன்னும் அதிகம் அதிகம் ஆதாரங்களுடன் நூலே வெளியிடும் அளவு செய்து உள்ளது ஆனால் பல வேளைகளுக்கு மத்தியில் இன்று சென்னை தினம் என்பதால் இன்றே இக்கட்டுரையை வெளியிட வேண்டும் என்று மாலையில் எழுத துவங்கியதால் பல செய்திகளை கட்டுரையில் கூற முடியவில்லை. ஆகவே மற்றொரு சந்தர்ப்பத்தில் இதை விரிவாக பேசுவோம்.
தொண்டைமான் என்கிற பட்டமே அகமுடையார்கள் தொண்டை நாட்டை ஆட்சி செய்ததை குறிக்க வந்த பட்டமே. இந்த தொண்டைமான் பட்டம் அகமுடையார்களை குறிக்கவே முதலில் பயன்பட்டது. தொண்டைமான் என்று அகமுடையார்களை குறிக்கும் கல்வெட்டுக்கள் பல கிடைத்துள்ளன. மேலும் இந்த தொண்டைமான் பட்டத்தோடு தொடர்புடைய வேறு பட்டங்களான கச்சிராயர்,காடவராயர் ,பல்லவராயர் பட்டங்களையும் அகமுடையார்களின் பாரம்பரிய மிக்க பட்டங்களாகும். இது குறித்தும் விரிவான கட்டுரை மற்றொரு நாளில் வெளியாகும்.
விஜயநகர ஆட்சிக்கு எதிராக அகமுடையார்கள் கிளர்சியையும் செய்துள்ளனர். அதை பற்றிய பதிவை மற்றொரு நாளில் பதிவிடுகிறோம்.
இப்பதிவில் இணைப்புகளை சரிவர இணைக்க முடியவில்லை(கட்டுரை எழுத நேரம் எடுப்பதால் நேரம் கிடைக்கும் போது இணைப்புகளை வரிசைப்படி இணைக்கின்றோம்)
ஆட்சியாளர்களாக மட்டுமல்ல அகமுடையார்கள் சென்னை பகுதியில் பூர்வீகமாக வசித்து வருகிறார்கள் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருந்தாலும் ஓர் உதாரணமாக
கி.பி 8ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டில்
சென்னையின் பூந்தமல்லி பகுதியை சேர்ந்த உள்வீட்டு கோயில் சேவகர் (அகம்படியர்) சாதியை சேர்ந்த வினையன் தொழுசூரன் (இன்றைய துளுவ வேளாளர் உட்பிரிவை சேர்ந்தவன் ) கன்னியாகுமரி பகுதியில் நடந்த கோட்டை போரில் இறந்துள்ளான். துளுவ வேளாளரில் பூந்தமல்லி முதலியார் என்று இன்று அழைக்கப்படும் பிரிவினர் அகம்படியர் சாதியின் உட்பிரிவாக கி.பி 8ம் நூற்றாண்டிலேயே குறிப்பிடப்படுவதையும் இவன் சென்னையின் பூந்தமல்லி பகுதியை சேர்ந்தவன் என்பதையும் இச்செய்தியில் அறிய முடிகின்றது. இது போன்ற நிறைய உதாரணங்கள் உள்ளன இவற்றையும் வரும் காலங்களில் வெளியிடுவோம்.
தொண்டைமண்டல பகுதியை அகமுடையார்கள் 2000 வருடமாக ஆட்சி செழுத்தியிருந்தாலும் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் பூர்வீக குடிமக்களாக மீனவ மக்களே இருந்தார்கள் என்பதுவும் மறுக்க முடியாத உண்மை!





இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

🙏🙏🙏
Arumai anna
❤️❤️❤️❤️