@followers பிற சமூகங்கள் போல நாம் (அகமுடையார்கள்) ஒன்றாக இணைந்து செயல்பட முடியாத…

Spread the love

@followers பிற சமூகங்கள் போல நாம் (அகமுடையார்கள்) ஒன்றாக இணைந்து செயல்பட முடியாததன் காரணம் என்ன? -பாகம் 1
—————————
நம்மை சுற்றி இருக்கும் எல்லா சமூகங்களும் ஒன்றாக இருக்கின்றன. ஒற்றுமையாக இணைந்து செயல்படுகிறார்கள். கூட்டாக இணைந்து பெரும் முயற்சிகளை செய்திருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு
நாடார் சமுதாயம் ஒன்றாக இணைந்து நூற்றுக்கணக்கான பள்ளி ,கல்லூரிகளை கட்டியுள்ளனர்
யாதவர்கள், செட்டியார்கள், செங்குந்தர்கள் என பல்வேறு சமூகங்களும் ஒன்றாக இணைந்து ஒற்றுமையாக பொது சொத்துக்களை உருவாக்கியுள்ளனர் ?

அகமுடையார் சமுதாயத்தில் ஏன் இப்படிப்பட்ட முயற்சிகள் பெரிதாக நடைபெறவில்லை?

ஒன்றாக இணைந்து சமுதாய சொத்துக்களை உருவாக்குவது ஒருபுறம் இருக்க நம் சமுதாயத்தில் 50 பேர் ஒன்றாக ஒரே கருத்தில் இணைந்து தொடர்ச்சியாக பணியாற்றவே முடியவில்லையே? இதன் காரணம் தான் என்ன?

அகமுடையார்களுக்கிடையே ஒற்றுமை இல்லை, ஒற்றுமை இல்லை என்று பேசிவருகிறோமே தவிர ,ஏன் நாம் ஏன் ஒற்றுமை அடையவில்லை என்று என்றைக்காவது சிந்தித்திருக்கிறோமா? ஆனால் 20 வருடங்களுக்கு முன்பே இதை நான் யோசித்திருக்கிறேன். அதற்கான விடையையும் கண்டிருக்கிறேன். அதைப் பற்றி இப்பதிவில் விளக்க இருக்கிறோம்.

சரி நாம் ஏன் ஒற்றுமையடையவில்லை? அதற்கான விடை ஒற்றுமையாக செயல்படும் அந்த
மாற்று சமுதாயத்திடமிருந்தே கிடைக்கிறது.

யாதவர்கள், நாடார்கள், செட்டியார்கள் மட்டுமல்ல

விளிம்புநிலை மக்களாக கருதப்பட்ட வண்ணார்கள், நாவிதர்(மருத்துவர் சமுதாயம்) கூட ஒற்றுமையாக இணைந்து சாதிக்க காரணம்!
அவர்களுக்கென்று ஒரு தொழில் பிண்ணனி இருந்தது தான்.
ஆம் மேற்சொன்ன அனைத்து சமுதாயத்தினருக்கும் பின்னால் ஒரு தொழில் இருந்தது. அது அவர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து இருப்பதும் , அவர்கள் ஓரிடத்தில் அமைப்பை ஏற்படுத்தி ஒற்றுமையாக இணைந்து செயல்படவும் வழிவகை செய்தது.

ஆனால் துரதிஷ்டவசமாக அப்படிப்பட்ட பொதுவான தொழில் அமைப்பு பின்னணி அகமுடையார்களிடத்தே இல்லாமல் போயிற்று!

இதனால் .நாம் ஓர் தொழிலை செய்யவோ அதில் ஒருவரையொருவர் சார்ந்து செயல்பட்டு ஒற்றுமையுடன் முன்னேறவோ வாய்ப்போ இல்லாமல் சென்று விட்டது.

இன்று தொழில்முனைவோராக சாதித்து இருக்கும் அகமுடையார்கள் தங்களின் குடும்பத்தினர் விட்டு சென்ற வியாபாரத்தினாலோ அல்லது அவர்களாகவே முயற்சி செய்து பெற்ற வளர்ச்சியாகவோ இருப்பதால் சமுதாயத்தின் மீது பற்றுதல் என்பது பெரிதாக இல்லை என்பது தான் உண்மை!

சுயம்புவாகவே வளர்ந்ததால் ,எவரையும் நம்பி நாம் இல்லை என்ற நினைப்பு அகமுடையார்களுக்குள் ஓங்கி வளர்ந்து விட்டது. இதனால் இப்படி முன்னேறிய நம்மவர்கள் சமுதாயத்தை ,சமுதாய உணர்வை பெரிதாக கருதுவதில்லை.

ஒற்றுமை இல்லை என்கிற நம் சமுதாயத்தின் தலையாய பிரச்சனைக்கான தீர்வை நம் முன்னவர்கள் யோசித்திருக்க வேண்டும் .

முன்னவர்கள் முயற்சி செய்தார்கள்.பல்வேறு சமுதாய அமைப்புகளை உருவாக்கினார்கள்.
ஆனால்
ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது,
காகிதத்தில் சர்க்கரை என்று எழுதி நாக்கில் தடவினால் இனிக்காது
என்பது போல

வார்த்தைகளில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது நீண்ட நாள் நீடிக்கவில்லை. செயற்கையாக ஒற்றுமையாக இருக்க நினைப்பது அல்லது செயற்கையாக ஒற்றுமையாக நீடிக்க வைப்பது சாத்தியமே இல்லாதது ஆகவே இது போன்ற அமைப்புகள் நீண்ட நாள் நீடிக்கவில்லை.

சரி இதற்கெல்லாம் தீர்வே கிடையாதா ?
நிச்சயமாக விடை உண்டு! காலம் கடந்திருக்கலாம் ஆனால் காலம் கொடுத்திருக்கிற அற்புதமான வாய்ப்புகள் நம்மை இன்னும் இணைக்கவே போகிறது. அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

அதை மற்றொரு பதிவில் பார்க்கலாம். சொல்வற்கு நிறைய உண்டு. கேட்பதற்குத் தான் காதுகள் வேண்டும்.

தொழில் இல்லாதவர்களும் தொழிலை உருவாக்கி சாதித்த பிண்ணனி- சாதித்த சாதிகள் இரண்டு உதாரணங்கள்
—————————–
சிலநேரங்களில் சில சமுதாயங்களுக்கு பரம்பரையாக பொதுவான தொழில் ஒன்று இருந்திருக்காது ஆனால் அவர்கள் வளர்ந்து வரும் கால வாய்ப்புகளை பயன்படுத்தி அவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை பயன்படுத்தி அதையே தங்களது சமுதாய மக்களின் தொழிலாக மாற்றி ஒற்றுமையாக இணைந்து பொருளாதாரத்தில் உயர்ந்ததற்கும் உதாரணங்கள் உண்டு.

கள் இறக்கும் தொழில் செய்த ஒர் குறிப்பிட்ட சமுதாயத்தினர் பனைமரத்தின் உபரி பொருட்களான பதநீர்,நொங்கு, கருப்பட்டி போன்ற பொருட்களை மற்ற வியாபாரிகளிடம் விற்பனை செய்து வந்தனர். அதன் பின் சில காலத்திலேயே தங்கள் பொருளை மற்ற வியாபாரிகளிடம் விற்ற நிலை மாறி அவர்களே அவர்கள் பொருட்களை விற்பனை செய்ய ஆரம்பித்து பின் அவர்கள் எல்லா மளிகை ,பலசரக்கு பொருட்களை வியாபாரம் செய்து இன்று தமிழத்தில் மளிகை கடை ,பலசரக்கு மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரத்தை தங்கள் கைகளில் வைத்துள்ளனர். அந்த வியாபாரம் தான் அவர்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ள வழிவகை செய்தது ,அந்த வியாபாரம் தான் அவர்கள் கூட்டாக இணைந்து செய்ய வழிவகை செய்தது, அந்த வியாபாரம் தான் அவர்கள் சமுதாயமாக இணைந்து பள்ளி ,கல்லூரி, திருமண மண்டபம் என்று சமுதாய பொது சொத்துக்களை உருவாக்கி அதில் மற்றவர்கள் பயன்படுத்துவதற்கு பணம் பெறவும் ,அவர்கள் சமூகத்தவர்கள் சலுகை தொகையில் பலன் பெறவும் வழிவகை செய்து இன்று வியாபாரம் மட்டுமல்லாது பல்வேறு அரசு வேலைகளில்
அவர்கள் முதன்மை இடத்தை பெற இன்று வரை உதவி வருகிறது என்றால் அது மிகையில்லை.

உசிலம்பட்டி,தேனி பகுதிகளில் முறுக்கு வியாபாரத்தை ஆரம்பித்த குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த சிலர், இன்று பலராக பெருகி இன்று அந்த சமுதாயத்தின் ஒர் குறிப்பிட்ட அளவினர் இந்தியா முழுவதும் முறுக்கு மற்றும் பலகார தொழில் உற்பத்தியில் கொடி கட்டி பறக்கின்றனர். இது போன்று பல்வேறு உதாரணங்களை சொல்ல முடியும்.


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo