பூங்காவுக்கு நடுவில் சிலை வைத்தால் அது தமிழகம், பூங்காவையே உருவாக்கி சிலை வைத்…

Spread the love

பூங்காவுக்கு நடுவில் சிலை வைத்தால் அது தமிழகம், பூங்காவையே உருவாக்கி சிலை வைத்தால் அது ஆந்திரா
—————————-
ஆந்திராவின் சித்தூர் மாநகரில் மருதுபாண்டியர் பெயரில் பூங்கா ஒன்றும் அமைக்கப்படுகிறது பூங்காவின் நடுவில் மாமன்னர்கள் மருதுபாண்டியர்களுக்கு சிலை அமைக்கப்பட உள்ளது என்பது நீங்கள் அறிந்த செய்தி!

பூங்காவுக்கு நடுவில் சிலை வைத்தால் அது தமிழகம், பூங்காவையே உருவாக்கி சிலை வைத்தால் அது ஆந்திரா

இந்நிலையில் தமிழகம் தாண்டி ஆந்திராவின் சித்தூர் மாநகரிலும் மருதுபாண்டியர்கள் சிலை வைக்க பெருமுயற்சி எடுத்த அண்ணன்
புல்லட் சுரேஷ் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க
அகம் அறக்கட்டளை சார்பாக சகோதரர் அருணை இமயன் உள்ளிட்ட திருவண்ணாமலையை சேர்ந்த அகமுடையார் உறவுகள் இன்று சித்தூர் சென்றிருந்தனர்.

இந்நிலையில் திரு.புல்லட் சாய் அப்பு அவர்கள் திருவண்ணாமலை உறவுகளை அழைத்து சென்று மாமன்னர் மருதிருவர் சிலை மற்றும் பூங்கா அமைய உள்ள இடங்களை சுற்றிக் காண்பித்தார்..

தமிழ்நாட்டில் அகமுடையார்கள் ஆயிரம் பேர் அதிகாரத்தில் இருந்தாலும் என்ன பயன்?

தமிழகம் தாண்டி ஆந்திராவில் அண்ணன் புல்லட் சுரேஷ் ஒற்றை ஆளாக சாதித்து காட்டி உள்ளார்! காரணம் ஆளுமை! அதையும் தாண்டி அகமுடையார் என்ற உணர்வு!

சமூக உணர்வு உள்ளவர்கள் அதிகாரத்தில் இருந்தால் எதையும் சாதிக்க முடியும்! அதே நேரம் சமுதாய உணர்வு உள்ளவர்களை நாம் ஆதரிக்கவும் வேண்டும்!

ஆந்திர வாழ் அகமுடையார்களே! சித்தூர் சிங்கம் அண்ணன் கைகாட்டும் இடத்தில் ஓட்டளிக்க மறக்காதீர்கள்!

இதே போல் தமிழக அரசிடமும் மத்திய அரசிடமும் அகமுடையார் சமுதாயத்திடத்தின் சார்பாக கோரிக்கைகளை வைத்துள்ளோம்.

கோரிக்கைகளை எவர் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கே நமது ஓட்டு இருக்க வேண்டும். பார்ப்போம்!



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo