First
அகமுடையார் குல பேரரசர் உடையார் ஶ்ரீ இராஜ ராஜ சோழ தேவரின் 1032வது சதய விழா இன்று ஆரணியில் கொண்டாடப்பட்டது.
————————————————————————————————————–
இன்று ஆரணியில் அகமுடையகுல பேரரசர் இராஜ ராஜ சோழன் அவர்களின் 1032 வது சதய விழா சிறப்பாக கொண்டாட பட்டது/
ஆரணியில் உள்ள துளுவ வேளாளர் அகமுடையார் மண்டபத்தில் இன்று மாலை சுமார் 5 மணியளவில் DSP சங்கர் அவர்களின் தலைமையில்…SMG பிரபு மற்றும் Apple schools கணேஷ் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது
சிறப்பு அழைப்பாளராக திருமதி.வள்ளி MA-ML உயர்நீதி மன்ற வழக்கறிஞர் அவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர் விழாவில் ஆரணி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 50க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
புகைப்படங்கள் மற்றும் தகவல் உதவி: ஆரணி நரேஷ் அகமுடையார்
சோழர்கள் எச்சாதியினர் என்று அறியவிரும்புவர்கள் கீழ்கண்ட் இணைப்பை கிளிக் செய்து படிக்கலாம்!
http://www.agamudayarotrumai.com/4218
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
நம்மன்னர் பெருமானை எவ்வளவு போற்றினாலும் போதும் என்ற மனம் வராது,போற்ற புதிதாய் வார்த்தைகளை தேடினால் புதிதாய் வார்த்தைகள் இல்லை, ஏனென்றால் தமிழன்னையிடம் உள்ள வாழ்த்துச் சொற்கள் அனைத்தையும் நமக்கு முன்னரே பயன்படுத்தியிருக்கிறார்கள், அவரைப் போன்ற மதிநுட்பமானவர் இதுவரை பிறக்கவில்லை,அவருக்கு நிகர் அவரே,இன்றைய அனைத்துத் துறைகளையும் நெறிபடுத்தியவர் இராசராசரே,நில அளவை,நீர் மேலாண்மை,சாலை போக்குவரத்து,நீர்வழி போக்குவரத்து,வாணிப ஒழுங்குமுறை,நேர்மையான வரிகள்,அவசியமான திட்டங்களுக்கு மானியச் சலுகை,அனைவருக்கும் சமமான மருத்துவம்,வழிப் போக்கர்களுக்கு பாதுகாப்பான இலவச சத்திரங்கள்,போர் பயிற்சிக் கூடங்கள்,கல்விக் கூடங்கள் இப்படி எழுதிக் கொண்டே செல்லலாம், பெருவுடையரை தரிசிக்கும் பொழுது எமக்கு பெருவுடையர் மட்டும் தெரிவதில்லை,எம்மன்னர் இராசராசரும் இணைந்தே காட்சியளிக்கிறார்கள்,சிவம் வேறு, சோழம் வேறு கிடையாது,எம்மைப் பொறுத்தவரை இரண்டும் ஒன்றே,இராசராசச் சோழரின் பொற் பாதம் பணிவோம்,நம் அடுத்த தலைமுறைக்கு அவர் புகழை போதிப்பது நம் அனைவரின் கடமை,விழாவில் கலந்து கொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி