ஆர்வம் ஐஏஎஸ் அகாதெமியில் குரூப்-1 தேர்வுக் கான இலவச மாதிரி நேர்காணல் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை (ஏப். 5) முதல் தொடங்க உள்ளது.
இது குறித்து ஆர்வம் ஐஏஎஸ் அகாதெமியின் நிறுவனர் மு.சிபிகு மரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடுஅரசுப் பணியாளர் தேர்வாணையம் துணை ஆட்சி யர், காவல் துணைக் கண்காணிப்பாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக் குநர் உள்ளிட்ட சுமார் 78 குரூப் 1 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை நடத்துகிறது. எழுத்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட் டுள்ள நிலையில், இறுதிக்கட்டத் தேர்வான நேர்முகத்தேர்வு வரும் ஏப். 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்த நேர்முகத் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு வழிகாட் டும் வகையில் இலவச மாதிரி நேர்காணல் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுக்கான அடிப்படைப் பயிற்சியை ஆர்வம் அகாதெமி வழங்கு கிறது.
வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 5) தொடங்கும் இந்தப் பயிற்சியில் சம்பந்தப்பட்ட துறை வல்லுநர்கள், ஓய்வு பெற்ற அரசுத் துறை அதி காரிகள் கலந்து கொண்டு, நேர்முகத் தேர்வை அணுகுவதற்கான வழி காட்டுதலை வழங்குவார்கள்.
தகுதியுள்ள தேர்வர்கள் தங்கள் சுய விவரங்களுடன் அண்ணா நகர் 12-ஆவது பிரதான சாலை, 2,165, எல்.பிளாக்கில் உள்ள அகா தெமிக்கு நேரடியாக வந்து பதிவு செய்து கலந்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 7448814441, 9150466341ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளார்.

இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
