• Skip to main content
  • Skip to primary sidebar
  • வரலாறு
    • கல்வெட்டுக்கள்
    • நடுகற்கள்
    • செப்பேடுகள்
  • youtube Channel
  • Facebook Page

Agamudayar

பச்சையப்ப முதலியார் -அகமுடையார் இனத்தை சேர்ந்தவர் சான்று 3 ——————–…

December 22, 2020 by administrator

பச்சையப்ப முதலியார் -அகமுடையார் இனத்தை சேர்ந்தவர் சான்று 3
———————————————————–
வள்ளல் பச்சையப்ப முதலியார் அகமுடையார் இனத்தை சேர்ந்தவர் என்பதற்கு இன்றும் வாழும் சாட்சிகளாக உறவினர்கள் இருக்கின்ற போதும் துணிந்து அவரை தங்கள் இனத்தவர் என்று மாற்று சாதியினர் கூறி வந்துள்ளனர்.

வள்ளல் பச்சையப்ப முதலியார் அகமுடையார் இனத்தவர் என்பதற்கு முதல் ஆதாரமாக 200 வருடங்களுக்கு முன்பு 1800களின் ஆரம்பித்தில் சீனிவாச பிள்ளை எழுதி வெளியிட்ட பச்சையப்ப முதலியார் சரித்திரம் நூல் குறிப்பை ஆதாரமாக காட்டியிருந்தோம்.

பின்னர் இரண்டாவது ஆதாரமாக 1930-40 களின் காலத்தில் திராவிடன் இதழில் திராவிட பித்தன் என்பவர் எழுதிய பச்சையப்பர் குறித்த கட்டுரை ஆதாரத்தை வெளியிட்டோம்.

தற்போது மூன்றாவது ஆதாரத்தையும் வெளியிடுகின்றோம்.

அதாவது ஆ. சிங்காரவேலு முதலியார் அவர்கள் சென்னையில் உள்ள பச்சையப்பா கல்லூரியில் தமிழ் பண்டிதராக பணியாற்றினார் இவர் வாழ்ந்த காலத்தில் திரட்டிய செய்திகளை கொண்டு அபிதான சிந்தாமணி என்ற பெயர் இலக்கியக் கலைக்களஞ்சியத்தை உருவாக்கினார்.

இது இவருடைய வாழ்நாளின் பின்னாளில் சரியாக சொன்னால் இவர் இறந்து ஒருவருடம் கழித்து 1932ம் வருடம் இவரின் புதல்வர் சிவப்பிரகாச முதலியாரால் வெளியிடப்பட்டது.

இந்நூலிலும் பச்சையப்ப முதலியார் அகமுடைய வேளாளர் இனத்தவர் என்று தெளிவாக எழுதியுள்ள சான்றை இப்பதிவில் இணைத்துள்ளோம்.

நம்மவர்களை மாற்று இனத்தவர்கள் தங்கள் இனத்தவர் என்று தொடர்ந்து பொய்யாக ஏமாற்றும் போக்கு எப்படி வளர்ந்தது? அது பட்டங்களை சாதியாக கருதி சொந்த சாதிக்காரர்களையே தங்கள் சாதி இல்லையென்றும் வேறு சாதிக்காரன் வைத்திருக்கும் பட்டத்தை வைத்து தம் சாதி தான் என்று நினைக்கும் நம்மவர்களின் அறியாமையாலும் வரலாற்று அக்கறையின்மையாலுமே நடக்கின்றது!

பட்டங்கள் வேறுபட்டாலும் சாதி ஒன்று! பட்டங்கள் ஒன்றாக இருந்தாலும் வேற்று சாதி, வேற்று சாதி தான்! இதை புரிந்து கொண்டு செயல்பட்டால் எல்லாம் சரியாகும்!

வெட்கமே இல்லாமல் துணிந்து பொய் பேசும் கூட்டமே இனியாவது திருந்திக்கொள்ளுங்கள்! ஏனென்றால் பொய் என்றும் நீடிக்காது! உண்மை என்றும் பொய்யாகாது!

வாய்மையே வெல்லும்!

குறிப்பு:
இப்பதிவின் முதல் புகைப்படம் புதிய நூல் ஆதாரம் ஆகும்.
2வது,3வது படங்கள் பழைய நூல் ,கட்டுரை ஆதாரங்கள்!

ஆதாரம்
சிங்காரவேலு முதலியார் எழுதிய அபிதான சிந்தாமணி பக்கம் எண் 1006.
இந்நூலை இணையத்தில் படிக்க விரும்புவோர் அல்லது ஆதாரத்தை சரிபார்த்துக்கொள்ள விரும்புவோருக்கான லிங்க் https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZM9jupy.TVA_BOK_0009120/page/1005/mode/2up?q=%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF




Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

புதுக்கோட்டையில் கிடைத்த அரிய ஆசிரியம் கல்வெட்டு------------------------------...
இராமய்யன் பல்லவராயர் எனும் அகம்படிய வெள்ளாளர் பற்றி வலங்கை சரித்திரம் தரும் செய...
பெண்கள் தின சிறப்பு கல்வெட்டு பதிவு: அகம்படி நங்கை கல்வெட்டு -----------------...
உயிர் விட இருக்கும் அரசனும்-தன் உயிரை மாய்த்துக்கொள்ள மனைமகன் (அகமுடையார்) தயாரா...
ஆசிரியம் கல்வெட்டு 2- ஞானசம்பந்த அகமுடி ------------------------------------செ...
அகம்படியாரில் கோவன் தெற்றி பொன்பரப்பினான் திருஞானசம்பந்தன் கல்வெட்டு-----------...
அகம்படி முதலிகளில் கூடல் மாறன் குழந்தான் சேதிராயன் கல்வெட்டு பார்வையிடல் ------...

Filed Under: வரலாறு

Primary Sidebar

Recent Posts

  • “வரலாற்று தரவுகளில் அகமுடையார்கள்” என்ற ஓர் புதிய நூல் நம் பார்வைக்கு கிடைத்த…
  • சவளம் எனும் ஆயுதத்தை கொண்ட மூரிவன் அகம்படியர் கல்வெட்டு
  • புதுவை மாநிலம் பாகூர்கொம்யூன்பஞ்சாயத்துக்குஉட்பட்ட ஸ்ரீ வேதாம்பிகைசமேத ஸ்ரீ மூலந…
  • அம்பலூரில் நடைபெற்ற சின்னமருது பாண்டியர் 269 வதுபிறந்தநாள் கல்வி மையம் திறப்பு விழா பாகம் 2
  • மருதிருவர் கல்வி மையத்தின் புதிய கிளைகள் திறப்பு ——————————-…