• Skip to main content
  • Skip to primary sidebar
  • வரலாறு
    • கல்வெட்டுக்கள்
    • நடுகற்கள்
    • செப்பேடுகள்
  • Shorts
  • youtube Channel
  • Facebook Page

Agamudayar

“நான் சாப்பிடட்டுமா ? வேண்டாமா..? ” -புரட்சித் தலைவர் எம்ஜிஆரும் இலட்சிய நடிகர்…

March 29, 2017 by administrator Leave a Comment

Spread the love

“நான் சாப்பிடட்டுமா ? வேண்டாமா..? ” -புரட்சித் தலைவர் எம்ஜிஆரும் இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.இராஜேந்திரன் அகமுடையாரும்!
————————————————————————————————————-
# சாப்பாட்டு இலை முன் அமர்ந்து கொண்டு ,
இந்த ஒரே ஒரு சாமர்த்திய கேள்வியை மட்டுமே வஜ்ராயுதமாக பயன்படுத்தி
தான் நினைத்ததை முடித்தவர் எம்.ஜி.ஆர். !
.
அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்று ஓராண்டுக்குள் மறைந்து விட …
அடுத்த முதல்வர் யார்..? என நாலா திசைகளிலிருந்தும் குரல் வர…

நெடுஞ்செழியன் பெயரும் இடையில் வர ..
உடனே ஓடோடிச் சென்று ராஜாஜியைச் சந்திக்கிறார் கருணாநிதி…
.

அதற்கு ராஜாஜி, “ உன்னுடைய எண்ணம் ஈடேற வேண்டுமானால் அது ஒரே ஒருவரால்தான் முடியும்….எம்.ஜி. இராமச்சந்திரனைப் போய் பார் ” என்று அனுப்பி வைக்க….
உடனடியாக கருணாநிதி எம்.ஜி.ஆரைச் சந்தித்து, “எனது பேச்சும் மூச்சும் தமிழ், தமிழ்… என்றுதானே ஒலித்துக்கொண்டிருக்கிறது. எனது மனைவி மக்களை மறந்து , இரவு-பகல் பாராது இந்தத் தமிழ்ச் சமுதாயத்திற்காகப் பட்டி தொட்டியெல்லாம் மேடையேறிப் பேசிவருகிறேன். “என்று எதுகை மோனையுடன் எம்.ஜி.ஆரிடம் பேச …இவை எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்.சொன்னார் இப்படி:

“நான் பார்த்துக்கொள்கிறேன். பதட்டம் இல்லாமல் செல்லுங்கள்..”
.

உடனே அன்றைக்கு அரசியலில் மிகுந்த செல்வாக்கில் இருந்த எஸ்..எஸ். ராஜேந்திரனுக்குப் போன் செய்த எம்.ஜி.ஆர்….
, “ராஜேந்திரா! மதியச் சாப்பாட்டுக்கு உன் வீட்டுக்கு வருகிறேன். அம்மாவிடம் சொல்லிவிடு…” என்று மட்டும் சொல்லி விட்டுப் போனை வைத்து விடுகிறார் …
.

சொல்லியபடி சரியாக ஒரு மணிக்கு எஸ்.எஸ்.ஆரின் இல்லம் வருகிறார் எம்.ஜி.ஆர்.
. இலை போட்டு இனிய முகத்துடன் எஸ்.எஸ்.ஆரின் தாய் , எம்.ஜி.ஆருக்கும்..எஸ்.எஸ்.ஆருக்கும் பரிமாற….
இந்த நேரத்தில் எஸ்.எஸ்.ஆர்…எம்.ஜி.ஆரிடம் “அண்ணே! இப்படித் திடுதிப்புன்னு சாப்பிட வர்றேன்னு நீங்க சொன்னா இதுல ஏதோ விஷயம் இருக்கும்…. என்னன்னு சொல்லுங்க….!” என்கிறார்….

“கருணாநிதி முதல்வர் நாற்காலியில் அமர விரும்புகிறார். நானும் அமர வைப்பதாக வாக்குக் கொடுத்து விட்டேன். அதற்கு உன்னுடைய உதவி தேவைப்படுகிறது. உன் பக்கம் உள்ள எம்.எல்.ஏக்களை கலைஞருக்கு ஆதரவாக செயல்படச் செய்யணும்…” என்று எம்ஜிஆர் விளக்குகிறார்.

திகைத்துப் போன எஸ்.எஸ்.ஆர். நிறைய விளக்கங்கள் சொல்லி.., “உங்களுக்காக என் உயிரையும் தருவேன். ஆனால் இது உங்களுக்கு வேண்டாத வேலை!” என்று எச்சரிக்கிறார்.

எம்.ஜி.ஆர். வாதம் செய்யவில்லை..வற்புறுத்தவில்லை…
எஸ்.எஸ்.ஆரிடம் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்கிறார்
, “நான் சாப்பிடட்டுமா ? வேண்டாமா..?”

எஸ்.எஸ்.ஆர். வெகு நேர யோசனைக்குப் பின் ..வேறு வழியின்றி சொல்கிறார்…
“சரி.. நீங்க சாப்பிடுங்க..”

அதன் பின்.. முதல்வராகக் கருணாநிதி பொறுப்பேற்கிறார்.
அப்புறம் ..நடந்ததை நாடே அறியும்…!

நன்றி: திரு.John Durai Asir Chelliah

கருணாநிதி பற்றி அன்றே எம்ஜிஆருக்க்கு எச்சரிக்கை செய்தார் எஸ் எஸ் ஆர் ஆனால் விதி யாரை விட்டது!

புகைப்படம்: இப்பதிவில் குறிப்பிட்டிருக்கும் புகைப்படம் வேறு ஓர் சந்தர்ப்பத்தில் வேறு ஓர் இடத்தில் எடுக்கப்பட்டது!



Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

திருவண்ணாமலை மாவட்டம்... #வந்தவாசி நகரில் நடந்த மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜை...
நாகப்பட்டினம் அகமுடையார் நலச்சங்கம் இரண்டாம் ஆண்டு குடும்பவிழா அழைப்பிதழ்
முறைகேடான கோப்பில் கையெழுத்திட மறுத்த அகமுடையார் இனத்தைச் சேர்ந்த பெண் அதிகாரி ம...
வீரகுல அமரன் இயக்கம் சார்பாக திருப்புவனத்தில் இன்று 17/12/2017 நடக்க இருந்த அக...
#அகக்குடியில் பிறந்த உலகப் புகழ் பெற்ற ஆற்காடு இரட்டை சகோதரர்கள்! #கால்நூற்றாண்ட...
முக்கிய தகவல்கள் SMS பெற
பெரும்புகழ் கொண்ட சொக்கப்பன் சேர்வைக்கார்(அகமுடையார்) மற்றும் அவர் புதல்வர் பெருமாள் சேர்வ
ஆழ்ந்த இரங்கல்கள் தம்பி #சேவூர் ஆதித்தன்
ஒரே குறிப்பில் இரு வரலாற்று உண்மைகள்! ------------------------------------------...
சோழவந்தான் ஆற்றில் இறங்கியவுடன் முதன் முதல் மண்டகப்படியாக #அகமுடையார்களின் மண்டக...
எம் குலம் தழைக்காவிட்டாலும் எம் குடிகள் தாகத்தால் தவிக்கக் கூடாது என்று சொன்ன மா...
அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அவர்கள் இன்றைய திருப்பத்தூர் நிகழ்வின் போது மாமன்னர் மருது...

Filed Under: Uncategorized

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Primary Sidebar

Recent Posts

  • கோவையில் #கிருஸ்தவ_அகமுடையார்கள்… மதம் மாறினாலும் நம் சாதி அடையாளத்தை பல சமூக…
  • agamudayar mandagapadi Mannargudi
  • #agamudayar #agamudayachi #maruthupandiyar #maruthuvamsam#muthuvaduganathathevar #thevar
  • #agamudayar #agamudayachi #maruthupandiyar #maruthuvamsam ஜம்புத் தீவு பிரகடனம்
  • agamudayar #agamudayachi #maruthupandiyar #maruthuvamsam#muthuvaduganathathevar #thevar